ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டம்.. சிங்கப்பூரை சிலிர்க்க வைத்த தமிழர்கள் !

Subscribe to Oneindia Tamil

செம்பவாங்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் செம்பவாங் என்னுமிடத்தில் போராட்டம் நடத்தினர்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்படவில்லை. இதனால் ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டம் கொண்டுவரக் கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர் தீவிர போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

singapore Tamilians protest against jallikattu ban

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சிங்கப்பூரில் செம்பவாங் நகரில் வசிக்கும் தமிழர்கள் புதன்கிழமை போராட்டம் நடத்தினர். மேலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை வழங்கினர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியாவில் ஜன.24-ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் தமிழகத்தை தாண்டி லண்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+