பஹ்ரைனில் சர் சையது நாள் கொண்டாட்டம்: மத்திய அமைச்சர் சவுத்ரி அஜீத் சிங் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
மனாமா: பஹ்ரைனில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் சர் சையது நாள் 26.11.2013 அன்று கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு துணை வேந்தர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஜமீருத்தீன் ஷா தலைமை விருந்தினராகவும், மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் சவுத்ரி அஜீத் சிங் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று உரை வழங்கினர்.
பஹ்ரைனுக்கான இந்திய தூதர் மோகன் குமார், தொழில் அதிபர் அப்துல் ஜப்பார் அல் கூஹெஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றுச் சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிர்வாகிகள் வஸீம் ஆலம், முஹம்மது சலீம், ஃபாரூக் சம்ஷி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications