இளம்பெண் பலாத்காரம்... 18 வயது குற்றவாளியை கல்லால் அடித்துக் கொன்ற தீவிரவாதிகள்

Subscribe to Oneindia Tamil

தரோரா: சோமாலியாவில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 18 வயது குற்றவாளியை தீவிரவாதிகள் கல்லால் அடித்துக் கொன்று தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

சோமாலியா நாட்டில் உள்ள தரோரா பகுதியில் அல்ஷபாப் என்ற தீவிரவாத அமைப்புச் செயல் பட்டு வருகிறது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஹசன்அகமது (18) என்பவர், 28 வயது பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த அல்ஷபாப் தீவிரவாதிகள், உடனடியாக ஹசனைப் பிடித்துச் சென்று இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் முடிவில் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டார் ஹசன்.

இதையடுத்து பலாத்காரம் செய்ததற்கு தண்டனையாக, ஹசனை கல்லால் அடித்து கொல்ல தீவிரவாதிகள் உத்தரவிட்டனர். அதன்படி அவரை பொதுமக்கள் முன்னிலையில் நிறுத்தி கல்லால் அடித்து கொன்று தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

கடந்த மாதம், இதே பகுதியில் 4 ஆண்களை திருமணம் செய்திருந்த ஒரு பெண்ணை தீவிரவாதிகள் கல்லால் அடித்துக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+