For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

60 வயது பெற்றோரைக் கொன்று மைக்ரோவேவ் ஓவனில் சமைத்த மகன் கைது: சீனாவில் கொடூரம்!

Google Oneindia Tamil News

ஹாங்காங்: ஹாங்காங்கில் மகனே பெற்றோர்களின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, சமைத்து டிபன்பாக்சில் அடைத்து வைத்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

ஹாங்காங்கை சேர்ந்த சா-வூங்-கி (65), சியூ-யூட்-ஈ (62) தம்பதியினரின் மகன் ஹென்றி ச்சு (30). கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இத்தம்பதிகளைக் காணவில்லை என உறவினர்கள் கூறி வந்தனர். இது குறித்து அவர்களது மகன் ஹென்றியிடம் கேட்கப் பட்டதற்கு, அவர்கள் சீனாவிற்கு சுற்றுபயணம் சென்றுள்ளதாகக் கூறி வந்துள்ளார்.

Son accused of killing and cooking parents

இந்நிலையில், சமீபத்தில் தனது பெற்றோரைத் தானே கொன்று விட்டதாக சமூக வலைதளப் பக்கத்தில் தகவல் பதிவு செய்துள்ளார் ஹென்றி.

இதனைத் தொடர்ந்து அவரது வீட்டைப் போலீசார் சோதனையிட்டனர். அப்போது ஹென்றி தனது பெற்றோர்களின் தலையை தனியாக வெட்டி எடுத்து உப்புடன் சேர்த்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு பிரிட்ஜில் வைத்து உள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் உடல் பகுதிகளை துண்டு துண்டாக வெட்டி, மைக்ரோ ஓவனில் சமையல் செய்து அதை டிபன் பாக்ஸில் அடைத்து வைத்து உள்ளதும் தெரிய வந்தது.

இது தொடர்பாக ஹென்றியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தனது நண்பன் சே சுன் கீயுடன் சேர்ந்து தனது பெற்றோரை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். அதனைத் தொடர்ந்து ஹென்றியையும், அவனது நண்பரையும் கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இது குறித்து இணையதளம் ஒன்றில் என்னால் மக்களின் வேதனை புரிந்து கொள்ள முடியாது ஏனெனில் எனது குழந்தை பருவத்தில் இருந்து இளமை காலம் வரை எனது அனுபவம் அப்படி இருந்தது.என சூ கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த வழக்கு ஹாங்காங் நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.

English summary
A MAN in Hong kong accused of killing his parents, cutting them up and packing them into lunch boxes 'like barbecued pork', a court has heard.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X