1984 டெல்லி கலவரம்: வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி யு.எஸ். கோர்ட்டில் சோனியா அபிடவிட்
நியூயார்க் : டெல்லியில் கடந்த 1984ம் ஆண்டு நடந்த கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாகக் கூறி, அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அபிடவிட் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 1984-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணத்தைத் தொடர்ந்து, டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக பயங்கர கலவரம் மூண்டதில் ஏராளமான பேர் பலியானார்கள்.
இந்த கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக, அமெரிக்காவில் உள்ள ‘நீதிக்கான சீக்கியர்கள்' என்ற அமைப்பின் சார்பில் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றுத் தொடரப்பட்டது.
தற்போது அந்த வழக்கைத் தள்ளுபடி செய்யும்படி அமெரிக்க நீதிமன்றத்தை நாடியுள்ளார் சோனியாகாந்தி.

நேரில் ஆஜராக வேண்டும்....
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்த வழக்கில் நேரில் ஆஜராகும் படி சோனியாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால், சோனியா ஆஜராகவில்லை.

நோட்டீஸ் அனுப்ப வேண்டும்....
அதனைத் தொடர்ந்து மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது ‘நீதிக்கான சீக்கியர்கள்' அமைப்பின் சார்பில் ஆஜரான வக்கீல், சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டும், அவர் கோர்ட்டில் ஆஜராகி தன் மீதான மனித உரிமை மீறல்கள் புகார்களுக்கு பதில் அளிக்க தவறிவிட்டார் என்றும், இதற்கான அவருக்கு நோட்டீசு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

விசாரிக்க இயலாது....
தனது சார்பில் ஆஜராக நியூயார்க்கில் உள்ள சட்ட நிறுவனம் ஒன்றை சோனியா காந்தி நியமித்தார். சம்மன்னை அடுத்து சோனியா காந்தியின் சார்பில் கோர்ட்டில் ஆஜரான அந்த நிறுவனத்தின் வக்கீல் ரவி பத்ரா வாதாடுகையில்; ‘மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோனியா காந்திக்கு கோர்ட்டின் சம்மன் வழங்கப்படவில்லை என்றும், இந்த விவகாரத்தை இந்த கோர்ட்டு விசாரிக்க முடியாது' என்றும் வாதாடினார்.

திருத்தப்பட்ட மனுத்தாக்கல்...
ஆனால், ரவி பத்ராவின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, மனுதாரர் சார்பில் திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய 4 வாரங்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.

சோனியா குற்றமற்றவர்....
இந்நிலையில் அந்த வழக்கையே தள்ளுபடி செய்யக் கோரி சோனியா சார்பில் 'அபிடவிட்' ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சோனியா காந்தி சார்பில் நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நடந்த சம்பவம் அந்நாட்டு நீதிமன்ற வரையறைக்குள் வரவில்லை என்றும் சோனியா காந்தி குற்றமற்றவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஈரான் பக்கம், ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 3,00000 டன் இந்திய எல்பிஜி! பரபரக்கும் மத்திய அரசு -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம்












Click it and Unblock the Notifications