சென்னை, பெங்களூரில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதி மலேசியாவில் கைது
கோலாலம்பூர்: சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள தூதரகங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதியை மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர்.
மலேசியாவில் உள்ள கெபாங் பகுதியில் தங்கியிருந்த ஒருவர் மீது அந்நாட்டு போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அந்த நபரை கடந்த டிசம்பர் மாதம் முதல் ரகசியமாக கண்காணித்து வந்தனர். கண்காணிப்பில் அவர் சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களை தாக்க திட்டமிட்டது தெரிய வந்தது.
இதையடுத்து மலேசிய தீவிரவாத தடுப்பு படையினர் அந்த நபரை வியாழக்கிழமை கைது செய்தனர்.
இது குறித்து துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் தத்துக் செரி முகமது பக்ரி முகமது ஜினின் கூறுகையில்,
அந்த தீவிரவாதியை கண்காணித்தபோது கிடைத்த தகவல்களை நாங்கள் கடந்த மாதம் 9ம் தேதி இந்திய அதிகாரிகளுக்கு தெரிவித்தோம். நாங்கள் அளித்த தகவல்களை வைத்து சென்னையில் கடந்த மாதம் 29ம் தேதி 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர் என்றார்.
கடந்த மாதம் 30ம் தேதி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரேயில தூதரகத்தை தகர்க்க திட்டமிட்ட இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications