தென் கொரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சுக் இயோல் அதிரடியாக கைது
சியோல்: ராணுவ சட்டத்தை பிரகடனம் செய்ததால் பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலை அந்நாட்டு புலனாய்வு அதிகாரிகள் இன்று அதிகாலை கைது செய்தனர். முன்னதாக ஆதராவளர்களின் போராட்டங்கள் காரணமாக கடந்த ஜனவரி 3ம் தேதி கைது செய்ய முடியாமல் அதிகாரிகள் வெறும் கையுடன் திரும்பினார்கள். இப்போது இரண்டாவது முயற்சியில் கைதாகி உள்ளார். தென்கொரியாவின் வரலாற்றில் பதவியில் இருக்கும் அதிபர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் மசோதாவை நிறைவேற்றுவதில் ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. தென்கொரியாவில் எதிர்க்கட்சியினர் வடகொரியாவுடன் இணைந்து நாடாளுமன்றத்தை முடக்க சதித்திட்டம் தீட்டுவதாக அதிபர் யூன் சுக்-இயோல் ராணுவ அவசர நிலையை அறிவித்தார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியதால் அவசர நிலை சில மணி நேரங்களில் கைவிடப்பட்டது.

எனினும் அதிபர் பதவி விலக கோரி தலைநகர் சியோலில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திடீர் கிளர்ச்சி காரணமாக அதிபருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மொத்தமுள்ள 300 எம்.பி.க்களில் 204 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் அதிபர் யூன் சுக்-இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து இடைக்கால அதிபராக பிரதமர் ஹான் டக்-சூ நியமிக்கப்பட்டார். ஆனால் அவருமே நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் பதவியை இழந்தார்.
இதனிடையே பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் யூன் சுக் இயோலுக்கு எதிராக தென் கொரிய நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து இருந்தது.
இதன் காரணமாக யூன் சுக் இயோலை ஜனவரி 3 ஆம் தேதியில் கைது செய்ய அந்நாட்டு புலனாய்வு அதிகாரிகள் முயன்றனர். ஆனால் அவரது ஆதரவாளர்களின் போராட்டத்தால் கைது செய்ய முடியவில்லை. இந்த நிலையில், அவரை கைது செய்யும் இரண்டாவது முயற்சியில் புதன்கிழமை அதிகாலையில் யூன் சுக் இயோலின் வீட்டின்முன் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் வந்தார்கள்.ஆனால், கைது நடவடிக்கை குறித்து முன்னரே அறிந்ததைப்போல, யூன் சுக் இயோலின் ஆதரவாளர்கள் 6500 பேர் ஒன்றுகூடி, பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர். மேலும், மனிதச் சங்கிலி போராட்டமும் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் மோதல் ஏற்பட்டது. கைது முயற்சியை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். இதை அடுத்து நீண்ட நேரத்திற்கு பிறகு, அவர் கைது செய்யப்பட்டார். இன்னும் 48 மணி நேரம் அதிகாரிகள் கண்காணிப்பில், யூன் சுக் இயோல் இருப்பார் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சட்டத்தின் முன் ஆட்சி முற்றிலும் சரிந்து விட்டது' என கைதுக்கு முன்பு பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர், யூன் சுக் இயோல் பதிவிட்ட வீடியோவில் கூறியுள்ளார். தென்கொரியாவில் அதிபர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications