தப்பு பண்ணிட்டேன்! என்னை மன்னித்துவிடுங்கள்! தென் கொரிய அதிபர் யூன் சுக் யீயோல்
சியோல்: தென் கொரியாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதற்காக என்னை மன்னித்துவிடுங்கள் என அந்நாட்டு அதிபர் யூன் சுக் யீயோல் கூறியுள்ளார். இனி தென் கொரியாவில் மீண்டும் ராணுவ ஆட்சியை அமல்படுத்த மாட்டேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
தென் கொரியாவில் கடந்த 3 ஆம் தேதி இரவோடு இரவாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கு காரணமாக எதிர்க்கட்சிகள் வடகொரியாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் தேச விரோத சக்திகளின் அச்சுறுத்தலால் ராணுவ ஆட்சியை கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

2025 ஆம் ஆண்டு தென் கொரியா நாட்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மசோதா குறித்து ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் தொடர் மோதல் போக்கு நிலவியது. இதனால் நாடாளுமன்றமே முடங்கியது.
இந்த நிலையில் ராணுவ ஆட்சியை அதிபர் யூன் கொண்டு வந்தார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். தென்கொரியா நாடாளுமன்றத்தில் நடந்த நடந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் ராணுவ ஆட்சி பிரகடனத்திற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
ராணுவ ஆட்சியை திரும்பப் பெறுவதற்கான தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.அதாவது 300 எம்பிக்களில் 190 பேர் எமர்ஜென்சிக்கு எதிராக வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற சபாநாயகர் ராணுவச் சட்டம் செல்லாது என்றும் அறிவித்திருந்தார்.
பிறகு ராணுவ ஆட்சியை திரும்ப பெறுவதாக அதிபர் அறிவித்தார். இதனால் அங்கு 12 மணி நேரம் நீடித்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தென் கொரிய அதிபர் யூன் சுக் யியோல் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில் மக்களை கவலையடையச் செய்துள்ளேன். பெரும் சிரமத்தை ஏற்படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ராணுவ ஆட்சி அமல்படுத்தியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள். ராணுவ ஆட்சியை மீண்டும் அமல்படுத்த மாட்டேன்.
எனது அரசியல் எதிர்காலத்தை மக்கள் சக்தி கட்சி தீர்மானிக்கும். எனது தவறுக்காக நான் எந்த விளைவுகளையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். நான் அடைந்த விரக்தியின் காரணமாக ராணுவ ஆட்சியை கொண்டு வந்துவிட்டேன் என்றார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications