குட் நியூஸ்... அதிக பலன் தரும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி... இந்த மாதமே இந்தியாவில் கிடைக்கும்
மாஸ்கோ: இம்மாத இறுதியில் இந்தியாவுக்கான ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் விநியோகம் தொடங்கும் என்று ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பால வெங்கடெஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது. இருப்பினும், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற சில மாநிலங்களில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மாநில அரசுகள் கூறியிருந்தன.

இந்தியாவில் ஸ்புட்னிக் வி
இந்நிலையில், இந்தியாவில் மூன்றாவது தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்குக் கடந்த சில தினங்களுக்கு முன் அனுமதி அளிக்கப்பட்டது. ஸ்புட்னிக் வி தடுப்பூசி ரஷ்யா ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே பல நாடுகள் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதால், ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவுக்கு வர காலதாமதம் ஏற்படும் என கூறப்பட்டது.

இம்மாத இறுதியில் கிடைக்கும்
இது குறித்து ரஷ்யாவுக்கான இந்தியா தூதர் பால வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், இம்மாத இறுதியில் இந்தியாவுக்கான முதல் தொகுப்பு அனுப்பப்படும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் உற்பத்தியும் வரும் மே மாதம் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்ய இதுவரை 5 இந்திய நிறுவனங்களுடன் ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

உற்பத்தி எவ்வளவு
முதலில் குறைந்தளவு தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டாலும் அந்த எண்ணிக்கை மெல்ல அதிகரிக்கப்படும் என்றும் இந்தியாவில் அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு 5 கோடி தடுப்பூசியை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் சுமார் 50% தடுப்பூசி இந்தியர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசி
ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் தடுப்பாற்றல் 91.6% ஆகும். உலர்ந்த வடிவத்தில் அதை 2 முதல் 8 டிகிரியில்கூட சேமிக்கலாம். அதாவது சாதாரண ப்ரிட்ஜிலேயே ஸ்புட்னிக் வி தடுப்பூசியைச் சேமிக்க முடியும். மேலும், பைசர், மாடர்னா தடுப்பூசிகளைக் காட்டிலும் விலையும் குறைவு என்பதால் வளரும் நாடுகளும் ஏழ்மை நிலையுள்ள நாடுகளும் பெரும்பாலும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியையே பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
'கோஸ்ட் டெலிவரி..' சிலிண்டர்களை வைத்து ஏஜென்சிகள் ஆடும் கேம்.. கதறும் பொதுமக்கள் -
துபாய் போட்ட திடீர் உத்தரவு.. இந்தியர்களுக்கு தான் மோசமான பாதிப்பு.. இன்னும் 10 நாளே தானே இருக்கு! -
ஹார்முஸ் நீரிணை.. கட்டுப்பாட்டை கையில் எடுக்கும் US! டிரம்ப் போட்ட உத்தரவால் இந்தியாவுக்கு சிக்கல் -
டிரம்ப்பிற்கு பதிலடி கொடுக்க வரும் புதின்? அமெரிக்காவுக்கு ‘செக்’ வைத்த ரஷ்யா! உலக போர் ஆபத்து? -
ஈரான் விவகாரத்தில் உள்ளே வரும் ரஷ்யா? பெசஸ்கியானுக்கு போனை போட்ட புதின்! பேசியது என்ன? -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள்












Click it and Unblock the Notifications