For Daily Alerts
Just In
மனைவியோடு லாஸ் ஏஞ்சலெஸில் பத்திரமாக "லேன்ட்" ஆனார் பசில் ராஜபக்சே!
லாஸ்ஏஞ்சல்ஸ்: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே, மனைவி புஷ்பா ஆகியோர் அமெரிக்காவுக்கே திரும்பிவிட்டனர்.
இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்ததால் அமைச்சராக பதவி வகித்தவர் பசில் ராஜபக்சே. அதிபர் தேர்தலில் மைத்ரிபாலவிடம் ராஜபக்சே தோற்ற நிலையில் நேற்று காலை கொழும்பில் இருந்து துபாய் வழியாக அமெரிக்காவுக்குப் புறப்பட்டார் பசில் ராஜபக்சே.
தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வீட்டுக்கு மனைவியுடன் பசில் ராஜபக்சே திரும்பிவிட்டார். பசில் ராஜபக்சேவும் குடும்பத்தினரும் அமெரிக்கா குடியுரிமை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜபக்சேவின் மற்றொரு சகோதரர் டட்லி ராஜபக்சேவையும் இலங்கையைவிட்டு வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Former Srilanka President Mahinda Rajapaksa's brother and Economic Development Minister Basil Rajapaksa has flown overseas early morning , yestreday
Story first published: Monday, January 12, 2015, 13:11 [IST]