2022 நிலைமைக்கு போகும் இலங்கை! எல்லாத்துக்கும் இந்த டிரம்ப்தான் காரணம்! மோசமாகும் நிலைமை!
கொழும்பு: கடந்த 2022ல் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது. இந்நிலையில், அதேபோன்ற பாதிப்பை தற்போது இலங்கை எதிர்கொண்டிருக்கிறது. இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு காரணம் டிரம்ப்தான் என்று சொல்லப்படுகிறது.
பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்ததைத் தொடர்ந்து, உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உலகின் 20% எண்ணெய் செல்லும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால், இலங்கைக்கு வரும் எரிபொருள் கப்பல்கள் தடைபட்டுள்ளன.

பெட்ரோல், டீசலுக்கு கட்டுப்பாடு
இதனால் 2022 பொருளாதார நெருக்கடியின் போது இருந்தது போல, தற்போது மீண்டும் QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் ரேஷன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு வாரத்திற்கு இருசக்கர வாகனங்களுக்கு 8 லிட்டர், ஆட்டோக்களுக்கு 20 லிட்டர், கார்களுக்கு 25 லிட்டர் என பெட்ரோல், டீசல் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு லீவு
போர் தொடங்கியதிலிருந்து இலங்கையில் எரிபொருள் விலை சுமார் 33% உயர்ந்துள்ளது. பேருந்து கட்டணங்கள் 12% மேல் அதிகரித்துள்ளன. எரிபொருள் தட்டுப்பாட்டைக் குறைக்க வாரந்தோறும் புதன்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உர இறக்குமதியும் பாதிக்கப்பட்டுள்ளதால், உணவுப் பொருட்களின் விலை 15% வரை உயரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எரிபொருள் சேமிப்பு
தற்போதைய அதிபர் அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு, இந்த நெருக்கடியைச் சமாளிக்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. சலுகை விலையில் எரிபொருள் வாங்க ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் தற்போது ஒரு மாதத்திற்குத் தேவையான எரிபொருளை மட்டுமே சேமிக்க முடியும். இதை அதிகரிக்க புதிய சேமிப்புக் கிடங்குகளைக் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
என்ன வித்தியாசம்?
திருகோணமலையில் உள்ள பழைய எண்ணெய் கிடங்குகளைப் புனரமைத்து பயன்படுத்த இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 2022-ல் கோத்தபய ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது, இலங்கையிடம் எரிபொருள் வாங்கப் பணம் (அந்நியச் செலாவணி) இல்லை. ஆனால், இப்போது அரசிடம் பணம் இருக்கிறது, ஆனால் போர் காரணமாக எரிபொருள் கப்பல்கள் வர முடியாத சூழல் நிலவுகிறது.
-
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
ஈரான் சொன்ன பாசிட்டிவ் நியூஸ்.. ஆனா பாருங்க இந்தியாவில் பதற்றம் குறையல! நேற்று குஜராத், இன்று அசாம்! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க














Click it and Unblock the Notifications