மரணத்திற்கு முன்பு ஸ்ரீதேவி மது அருந்தியிருந்தார்.. தடயவியல் அறிக்கை
நடிகை ஸ்ரீதேவி மது அருந்தியிருந்தார் என அவரது ரத்தப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
Recommended Video

துபாய்: நடிகை ஸ்ரீதேவி மது அருந்தியிருந்தார் என அவரது ரத்தப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க கணவர் மற்றும் தனது இரண்டாவது மகள் குஷியுடன் துபாய் சென்றிருந்த
நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு திடீரென உயிரிழந்தார்.
அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு
இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடற்கூறு ஆய்வு மற்றும் தடயவியல் அறிக்கையை துபாய் அரசு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளது.

சந்தேகம் இல்லை
அதில் ஸ்ரீதேவி ஹோட்டல் குளியல் அறையில் இருந்த பாத்டப்பில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீதேவி மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்தப்பரிசோதனை
ஸ்ரீதேவி மரணத்தில் குற்றநோக்கமோ சதிச்செயலோ ஏதுமில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீதேவி ரத்தப்பரிசோதனை அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

மதுபோதையில் மரணம்
அதில் நடிகை ஸ்ரீதேவி மரணத்திற்கு முன்பு மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டடுள்ளது. இதனால் மதுபோதையில் பாத் டப்பில் மூழ்கி அவர் உயிரிழந்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications