இலங்கை- தமிழருக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக இன்று அனைத்து கட்சி கூட்டம்- பல கட்சிகள் புறக்கணிப்பு!
கொழும்பு: இலங்கையில் தமிழருக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே இன்று அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தை ஜேவிபி உள்ளிட்ட பல கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பது அந்நாடு விடுதலை அடைந்த காலத்தில் இருந்தே முன்வைக்கப்பட்ட கோரிக்கை. ஆனால் பெரும்பான்மை சிங்களர்கள் தமிழர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டனர். இதனால் இலங்கை தமிழினம் இனப்படுகொலையை எதிர்கொண்டது. இதனையடுத்து இலங்கையில் தமிழருக்கு தனிநாடு ஒன்றுதான் தீர்வு என ஆயுதப் போராட்டம் நடைபெற்றது.

இலங்கை ஆயுதப் போராட்ட காலத்தில் இந்தியா தலையிட்டு தமிழருக்கு அதிகாரப்பகிர்வு வழங்க வகை செய்யக் கூடியதாக இலங்கை அரசியல் சாசனத்தில் 13-வது திருத்தம் கொண்டு வந்தது. இந்த 13-வது திருத்தம் தொடர்பாக பல்வேறு முரண்பட்ட கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனாலும் மத்திய அரசின் இலங்கை கொள்கையாக, 13-வது அரசியல் திருத்தத்தை செயல்படுத்த வேண்டும் என்பதாக இருந்து வருகிறது.
அண்மையில் இந்தியா வருகை தந்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவிடமும் பிரதமர் மோடி இதனை வலியுறுத்தி இருந்தார்.
இதனிடையே இலங்கையில் இன்று தமிழருக்கான அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்க அனைத்து கட்சிகள் கூட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கூட்டியுள்ளார். தமிழருக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கக் கூடிய திட்டம் தம்மிடம் இருக்கிறது என ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்திருதார். இந்த நிலையில் இன்றைய அனைத்து கட்சிக் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதேநேரத்தில் ரணில் கூட்டிய கூட்டத்தை ஜேவிபி உள்ளிட்ட சிங்கள கட்சிகள் புறக்கணித்துள்ளன. இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் கட்சிகள், தமிழ் கட்சிகள் பங்கேற்பதாகவும் அறிவித்துள்ளன.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
டிரம்புக்கு மூக்குடைப்பு. ஈரானை தாக்க தயாரான. அமெரிக்கா போர் விமானங்களை விரட்டியடித்த இலங்கை! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்












Click it and Unblock the Notifications