இலங்கை ஜனாதிபதி தேர்தல்- ஈழத் தமிழர் பொதுவேட்பாளர் அரியநேந்திரனுக்கு 2,26,343 ஓட்டுகள்!
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஈழத் தமிழரின் பொதுவேட்பாளர் அரியநேந்திரனுக்கு 2,26,343 வாக்குகள் கிடைத்துள்ளன. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றுவிட்டார். எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச 2-வது இடம் பிடித்தார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே பெரும் தோல்வியைத் தழுவினார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் 7 தமிழ்க் கட்சிகள் சார்பாக அரியநேத்திரன் எனும் அரியநேந்திரன் பொதுவேட்பாளராக போட்டியிட்டார். தமிழரசுக் கட்சி கூட அவரை ஆதரிக்காமல் சஜித்தை ஆதரித்தது.

இந்த நிலையில் வடக்கு கிழக்கு தமிழர்கள் மாவட்டங்களில் அரியநேந்திரன் 2-வது இடம் கிடைத்தது. அவர் மொத்தம் 2,26,343 வாக்குகளை பெற்றார். மொத்தம் 1.70%.
யாழ்ப்பாணம்- 116,688
வன்னி மாவட்டத்தில் 36,377
திருகோணமலை மாவட்டத்தில் 18,524
மட்டக்களப்பு மாவட்டத்தில் 36,905
திகாமடுல்லை மாவட்டத்தில் 9.985 வாக்குகள் அரியநேந்திரன் பெற்றார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வட்டுக்கோட்டையில் 11,170: காங்கேசன்துறையில் 5,726;மானிப்பாயில் 11,587; கோப்பாயில் 11,410; உடுப்பிட்டியில் 8,467; பருத்தித்துறையில் 8,658 சாவகச்சேரியில் 9,159 ஓட்டுகள் அரியநேந்திரனுக்குக் கிடைத்திருக்கின்றன.
வன்னி மாவட்டத்தில் மன்னாரில் 10,757, வவுனியாவில் 11,650, முல்லைத்தீவில் 12,810 ஓட்டுகள் அரியநேந்திரனுக்குக் கிடைத்தன.
திருகோணமலை மாவட்டத்தில் சேருவிலில் 2,412, திருகோணமலையில் 11,300, மூதூரில் 4,381 மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாவில் 10,890, மட்டக்களப்பில் 12,758, பட்டிருப்பில் 12,356 ஓட்டுகள் வாங்கி இருக்கிறார் அரியநேந்திரன்.
திகாமடுல்லை மாவட்டத்தில் அம்பாறையில் 28; சம்மாந்துறையில் 2,299; கல்முனையில் 2,623; பொத்துவிலில் 4,802 ஓட்டுகள் அரியநேந்திரனுக்குக் கிடைத்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications