46 இந்திய செவிலியர்கள் வலுக்கட்டாயமாக மொசூல் நகருக்கு இடமாற்றம்?
டெல்லி: ஈராக்கின் திக்ரித் நகரில் சிக்கித் தவித்த 46 இந்திய செவிலியர்கள் வலுக்கட்டாயமாக மொசூல் நகருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதாக வெளியாகி இருக்கும் தகவலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உள்நாட்டுப் போரை நடத்தி வருகிறது. இதில் ஈராக்கின் பல முக்கிய நகரங்களை அந்த அமைப்பு கைப்பற்றியிருக்கிறது.

அத்துடன் சிரியா, ஈராக்கில் தங்கள் வசமுள்ள பகுதிகளை இணைத்து 'இஸ்லாமிய தேசம்" என்ற தனிநாட்டையும் பிரகடனப்படுத்தியுள்ளனர். இந்த உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
மொசூல் நகரில் 39 இந்தியர்கள் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்களது கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. திக்ரித் நகரில் 46 இந்திய செவிலியர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்களுடன் பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகம் தொடர்பு கொண்டு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தது. இவர்களில் பெரும்பாலானோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் நேற்று 46 இந்திய செவிலியர்களை ஆங்கிலத்தில் பேசிய ஒரு குழுவினர், வலுக்கட்டாயமாக 2 பேருந்துகளில் ஏற்றி மொசூல் நகருக்கு அனுப்பி வைத்துள்ளது.
இதை கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டியும் உறுதி செய்துள்ளார். அவர்கள் ஏன் வலுக்கட்டாயமாக ஐ.எஸ்.ஐ.எஸ். வசமுள்ள மொசூல் நகரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது தெரியாததால் கேரளாவில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications