தைவானை மிரட்டும் 'மெரான்டி' புயலால் பள்ளிகளுக்கு விடுமுறை - விமானச் சேவையும் ரத்து
தைபேய்: தைவான் நாட்டில் மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் விரைந்துவரும் அசுரப் புயலின் அச்சுறுத்தலால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன் விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தைவான் நாட்டில் 21 ஆண்டுகளில் இல்லாத கடும் புயல் தாக்கியுள்ளது. இந்த ஆண்டு உலகை பதம்பார்த்த புயல்களில் மிகவும் பலமிக்கதாக கருதப்படும் 'மெரான்ட்டி' புயல் மணிக்கு சுமார் 216 கிலோமீட்டர் வேகத்தில் தைவான் நாட்டின் கடலோரப் பகுதிகளை சூறையாடி சீனாவை நோக்கி நகர்ந்து வருகிறது.

மிகவும் ஆபத்தான ஐந்தாம் எண் புயலாக அறிவிக்கப்பட்டுள்ள 'மெரான்ட்டி'யின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மரங்களும், மின்சார ஒயர்களும் விழுந்து கிடப்பதால் கிழக்கு தைவானில் உள்ள பல குடியிருப்பு பகுதிகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன.
கவோசியுங் உள்பட சில முக்கிய நகரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மின்தடையால் கோசியுங் நகரில் சுமார் 2 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன.












Click it and Unblock the Notifications