அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு.. போலீஸ் குவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெக்சாஸ்: அமெரிக்காவில் மீண்டும் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கிசூடு நடத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள வால்மார்ட் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் பலியானவர்கள் குறித்து உடனடி தகவல் ஏதும் வெளியாகிவில்லை. இந்நிலையில் தீவிரவாதிகள் பலரை பிணைக்கைதிகளாக பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Suspect Shot Amid Reported Shooting at Wal-Mart

தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகள் வரை இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதனை தொடர்ந்து வணிக வளாகம் முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் முதற்கட்டமாக ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தால் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில் 'பல்ஸ்' என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் தீவிரவாதி ஒருவர் நடத்திய கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மற்றொரு துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+