மலேசியாவில் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் கைது- இலங்கைக்கு நாடு கடத்தல்!!
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்: மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை புதுப்பிக்க நிதி திரட்டியதாக அதன் முக்கிய தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மவுனிக்க செய்தனர். இதன் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்பாடுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.

அதே நேரத்தில் வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்பட்டு வருவதாக இலங்கை அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் மலேசியாவின் கோலாலம்பூரில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி திரட்டியதாக 37 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அவர் 2012ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் வசித்து வந்தார். தற்போது அவரை மலேசிய அரசு உடனே இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications