ஆண் எனக்கூறி ஏமாற்றி திருமணம் செய்த பெண்... இந்தோனேஷியாவில் விநோதம்
ஜகர்தா: இந்தோனேஷியாவில் தன்னை ஆண் எனக்கூறி பெண் ஒருவர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவர் ஆண் அல்ல பெண் என்பது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா தீவை சேர்ந்தவர் சுவார்டி என்ற பெண். தன்னை ஆண் எனகூறி பெயரை மாற்றி, மற்றொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

சுவார்டி கடந்த ஆண்டின் இறுதியில் ஹெனியடி(21) என்ற பெண்ணை திருமணம் செய்தார்.இதையடுத்து சுவார்டி தாம்பத்ய உறவில் ஈடுபடாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஹெனியடி, சுவார்டியை கண்காணித்து வந்துள்ளார்.
இதனிடையே சுவார்டியின் பர்ஸில் இருந்தஅடையாள அட்டை ஒன்றை எடுத்து ஹெடியடி பார்த்துள்ளார். அப்போது சுவார்டி ஆண் அல்ல, அவர் பெண் என்பது தெரியவந்ததைக் கண்டு ஹெனியடி அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து ஹெனியடி அளித்த புகாரையடுத்து, சுவார்டி கைது செய்யப்பட்டார். அந்நாட்டு சட்டத்தின் படி, சுவார்டி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டு தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாம்.












Click it and Unblock the Notifications