கிளர்ச்சிப்படை முகாம் மீது குண்டு வீசிய சிரிய ராணுவம்: முக்கிய தளபதி பலி, 2 பேர் படுகாயம்
அம்மான்: சிரிய ராணுவம் நடத்திய தாக்குதலில் சிக்கி கிளர்ச்சிப்படையின் முக்கியத் தலைவர் கொல்லப் பட்டுள்ளார்.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராகதொடர்ந்து கிளர்ச்சி நடந்து வருகிறது. கிளர்ச்சி இயக்கத்தினர் அலிப்போ நகரை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அந்நகரை மீட்பதற்காக ஆசாத்தின் படையினர் போராடி வருகின்றனர்.
கடந்த இரண்டு வாரமாக சிரிய ராணுவம் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் உதவியுடன் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று சிரியா ராணுவ போர் விமானங்கள் கிளர்ச்சிப் படையினரின் முகாம் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
அத்தாக்குதலில் சிக்கி கிளர்ச்சி இயக்கத்தின் முக்கிய தளபதியான கத்தார் நாட்டை சேர்ந்த அல்-தாவ்ஹித் இயக்கத்தை சேர்ந்த யூசுப் அல்-அப்பாஸ் என்கிற அபு அல்-தயிப் கொல்லப்பட்டுள்ளார். மேலும், இத்தாக்குதலில் சிக்கி காயமடைந்த அந்த இயக்கத்தின் தலைவர் அப்துல் கதிர் சாலிஹ் மற்றும் ஒரு தளபதியும் சிகிச்சைக்காக துருக்கி கொண்டு செல்லப்பட்டனர். இதன் மூலம் சிரியா கிளர்ச்சிப்படையினருக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் சிரியா ராணுவத்துக்கு உதவ ஹெலிகாப்டர்கள், விமானிகள் மற்றும் ராணுவ நிபுணர்களை அனுப்பி இருப்பதாக இஸ்ரேல் பத்திரிகையில் செய்திகள் வெளியான பரபரப்புத் தகவல்களுக்கு வடகொரியா மறுப்புத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications