அபுதாபியில் நடந்த டி20 கிரிக்கெட் போட்டியில் ஈடிஏ மெல்கோ அணி வெற்றி
அபுதாபி: அபுதாபியில் நடந்த டி20 கிரிக்கெட் போட்டியில் ஈ.டி.ஏ. மெல்கோ அணி வெற்றி பெற்றது.
மேலப்பாளையம் மேப்பர்ஸ் கிரிக்கேட் கிளப் நடத்திய மூன்று ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் போட்டி அபுதாபி அல் சகாமா மைதானத்தில் நடைபெற்றது. இதில் மேலப்பாளையம் மேப்பர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், ஈ.டி.ஏ மெல்கோ அணியும் கலந்து கொண்டன.

இறுதி போட்டி 25.03.2015 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. இறுதி போட்டியில் ஈ.டி.ஏ. மெல்கோ அணி வெற்றி பெற்றது.

மேலும் இந்த மூன்று இருபது ஓவர் போட்டிக்கு கோப்பையை ஸ்பான்சர் செய்த ஜாபர் மீரான், கார்த்திக், சிராஜ் ஆரிப்பிதீன் ஆகியோர் கலந்து கொண்டு கோப்பையை வழங்கினார்கள். தொடர் நாயகன் விருது மற்றும் ஆட்ட நாயகன் விருதை ஈ.டி.ஏ மெல்கோ அணியின் கேப்டன் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் ராஜ்கபூர் பெற்றார்.

மேலும் சிறப்பு பந்து வீச்சுக்கான கோப்பையை எம்.எம்.சி.சி அணியை சேர்ந்த விக்கி தட்டிச் சென்றார். இந்த போட்டிக்கான டிராபி ஸ்பான்சர் செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

போட்டியை சிறப்பாக நடத்தி தந்த எம்.எம்.சி.சி. அணியை சேர்ந்த கேப்டன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பி.எஸ்.காஜா முஹைதீனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த போட்டி உடல் ஆரோக்கியத்திற்காக நடத்தப்பட்டது என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications