For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெஷாவர் தாக்குதலை நடத்திய 6 தீவிரவாதிகள் இவர்கள்தான்... போட்டோ வெளியிட்டது தாலிபான்

Google Oneindia Tamil News

பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவப் பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற மனிதத் தன்மையற்ற தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட தாலிபான் பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பெஷாவரில் உள்ள ராணுவப் பள்ளிக்கூடத்திற்குள் ராணுவ சீருடையில் புகுந்த 6 தாலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டுத் தள்ளியதில் 132 மாணவ, மாணவியர் உள்பட 141 பேர் அநியாயமாக கொல்லப்பட்டனர்.

Taliban release images of Peshawar killers, warn of more such attacks

இந்த வெறித் தாக்குதலில் ஈடுபட்ட 6 தீவிரவாதிகளையும் ராணுவத்தினர் சுட்டுக் கொன்று விட்டனர். இந்த நிலையில், தாக்குதல் நடத்துவதற்கு முன் 6 பேரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தாலிபான் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதுபோன்ற தாக்குதல் தொடரும் என்றும் அது எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை அழிக்க அரசு போர் தொடுக்க இருப்பதாக பிரதமர் நவாஸ் ஷெரிப் அறிவித்துள்ளார். பெஷாவரில் அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அவர் ஒருவாரத்திற்குள் செயல்திட்டம் வகுக்கப்பட்டு, பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கை உடனடியாக தொடங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மாணவர்களையும் அவர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

English summary
The Taliban gunmen who stormed a school on Tuesday in the Pakistani city of Peshawar killing 148 people, including 132 children, have been identified by the militant group
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X