ஆப்கானில் 85%ஐ கைப்பற்றிய தாலிபான்.. கந்தகார் துணை தூதரகத்தை காலி செய்த இந்தியா? நடந்தது என்ன?
காபுல்: ஆப்கானிஸ்தானின் கந்தகார் துணை தூதரகத்தில் இருந்து இந்திய அதிகாரிகள் பலர் வெளியேறி உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய அரசியல் திருப்பம் நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த 20 வருடமாக தாலிபான் படைக்கும் அமெரிக்க ராணுவத்திற்கும் போர் நடந்து வந்தது. இந்த நிலையில், கடந்த வருடம் ஆப்கானிஸ்தானில் போரை நிறுத்துவதாக அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டது.
தாலிபான் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அமெரிக்க படைகள் ஒப்புக்கொண்டது. செப்டம்பர் 11, 2021க்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் மாற்றம்
ஆனால் அமெரிக்க அதிபர் பிடன் முன்கூட்டியே அமெரிக்க படைகளை வாபஸ் வாங்கும் முடிவை எடுத்துள்ளார். ஆகஸ்ட் 31ம் தேதியே மொத்தமாக அனைத்து அமெரிக்க படைகளும் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்துள்ளார். அதோடு மொத்த ஆப்கானிஸ்தானும் காபுல் தலைமையின் கீழ் செயல்படுவது கஷ்டம் என்றும் அறிவித்துள்ளார். அதாவது ஆப்கானிஸ்தான் ராணுவம், தாலிபான் படைகளிடம் தோல்வி அடைய வாய்ப்புள்ளதாக மறைமுகமாக சுட்டிக்காட்டி உள்ளார்.

தோல்வி
இந்த நிலையில் அமெரிக்க படைகள் வெளியேறியதை பயன்படுத்தி ஆபகானிஸ்தானில் வேகமாக தாலிபான் முன்னேறி வருகிறது. ஆப்கானிஸ்தானின் 85% பகுதிகளை கைப்பற்றுவிட்டதாக தாலிபான் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 400 மாவட்டங்கள் உள்ள நிலையில் கிட்டத்தட்ட 250 மாவட்டங்களை தாலிபான் கைப்பற்றிவிட்டதாக அறிவித்துள்ளது.

சரண்டர்
ஆப்கானிஸ்தானின் பல்வேறு பார்டர்களை தாலிபான் கைப்பற்றி உள்ளது. அதோடு ஆப்கானிஸ்தானின் முக்கியமான நகரங்களை எல்லாம் தாலிபான் கைப்பற்றி உள்ளது. ஆப்கான் படைகள் வரிசையாக தாலிபான் படைகளிடம் சரண்டர் ஆகி வருகிறது. தற்போது ஆப்கானிஸ்தானின் முக்கியமான நகரமான கந்தகாரில் மோதல் வெடித்துள்ளது.

முன்னேற்றம்
கந்தகாரில் தாலிபான் படைகள் வேகமாக முன்னேறி வருகிறது. அங்கு பெரிய மோதல் வெடிக்கும் நிலை உள்ளதால் ஆப்கானிஸ்தானின் கந்தகார் துணை தூதரகத்தில் இருந்து இந்திய அதிகாரிகள் பலர் வெளியேறி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. நேற்று அந்த துணை தூதரகத்தை இந்தியா மூடியதாக செய்திகள் வந்தன, ஆனால் அதன்பின் இந்திய வெளியுறவுத்துறை இந்த செய்தியை மறுத்தது.

வெளியேற்றம்
இந்த நிலையில் அங்கு துணை தூதரகம் தொடர்ந்து செயல்படும் என்று இந்தியா கூறியுள்ளது. ஆனால் அங்கு பாதுகாப்பு கருதி 50 இந்திய தூதரக அதிகாரிகள் வெளியேறி உள்ளனர். துணை தூதரகம் தொடர்ந்து இயங்கினாலும், முக்கிய இந்திய அதிகாரிகள் எல்லோரும் கந்தகாரில் இருந்து வெளியேறிவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று
நேற்று இரவே சிறப்பு விமானம் மூலம் இவர்கள் கந்தகாரில் இருந்து வெளியேறினார்கள். இன்று இரவே கந்தக்காரை தாலிபான் படைகள் பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆப்கானிஸ்தானில் காபுல் மற்றும் மஸார் இ ஷாரிப் பகுதியிலும் இந்தியாவின் தூதரங்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications