அனிதாவுக்கு ஓஹாயாவிலும் தமிழர்கள் திரண்டு கண்ணீர் அஞ்சலி
கொலம்பஸ், ஓஹாயோ: அமெரிக்காவின் கொலம்பஸ் நகரில் நீட் போராளி அனிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அமெரிக்காவில் ஒஹாயோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் மற்றும் டப்ளின் நகரில் வசிக்கும் தமிழர்கள் 3 செப்டம்பர் 2017, மாலை 5:30 மணி அளவில் Sharon Woods Metro Park இல் ஒன்று கூடி மருத்துவக் கனவுகளைச் சுமந்தபடி இமைமூடிய அனிதாவுக்கு, அவரின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து மெழுகுவத்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இக்கண்ணீர் அஞ்சலி கூட்டத்தில், தனது குறிக்கோளான மருத்துவ படிப்பை எட்டி பிடிக்க ஏழ்மை நிலையை வென்றெடுத்து, அசத்தலான திறமையினால் மாநிலத்திலேயே சிறந்த மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வினால் தன் கனவு சிதைந்ததும் உலக தமிழர்கள் அனைவரையும் மீளத் துயரில் ஆழ்த்தி நம்மை விட்டுச் சென்ற அனிதாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கப்பட்டது.
மேலும், இதுபோன்று இனியொரு சம்பவம் தவிர்க்கவும் மாணவர்கள் நலன் காக்கவும், நீட்டுக்கு நல்லதொரு தீர்வை எட்டவும் தமிழக அரசுக்கு வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.
Recommended Video
செய்தி - படம்: கார்த்திகேயன் ரத்தினம், டப்ளின்.