துபாய் மன்னர் குடும்பம் வேட்டையாட 40,000 பேரை வெளியேற்றும் தான்சானியா அரசு
தொடோமா: துபாயைச் சேர்ந்த ராஜ குடும்பத்தினர் விலங்குகளை வேட்டையாட தான்சானியாவில் 40 ஆயிரம் மசாய் சமூக மக்கள் தாங்கள் இத்தனை ஆண்டுகளாக வசித்து வந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட உள்ளனர்.
தான்சானியாவில் கென்யா எல்லையையொட்டி உள்ள செரங்கெட்டி தேசிய பூங்காவை அடுத்து உள்ள லோலியண்டோவில் இருக்கும் 1,500 சதுர கிலோமீட்டர் இடத்தை துபாய் ராஜ குடும்பத்தார் வேட்டையாட பயன்படுத்த அதை வாங்கியுள்ளனர். அவர்கள் சார்பில் ஆர்டெலோ பிசினஸ் கார்பரேஷன் நிறுவனம் அந்த இடத்தை வாங்கியுள்ளது. முதலில் இந்த நில பேரத்தை எதிர்த்த தான்சானியா அரசு பிறகு சம்மதித்துவிட்டது.

இதையடுத்து ராஜ குடும்பத்தார் வேட்டையாட வசதியாக அந்த இடத்தில் இத்தனை காலமாக வாழ்ந்து வரும் மசாய் சமூக மக்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மசாய் மக்கள் இந்த பகுதியில் தங்கிக் கொண்டு தங்களின் கால்நடைகளுக்கு அதை மேய்ச்சல் நிலமாக பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது 40 ஆயிரம் மசாய் மக்கள் தாங்கள் வாழ்ந்து வரும் இடத்தை காலி செய்ய வேண்டும். இதை எதிர்த்து மசாய் சமூக பிரதிநிதிகள் தான்சானியா பிரதமர் மிசெங்கோ பிண்டாவை சந்தித்து புகார் தெரிவிக்க உள்ளனர்.
மசாய் மக்கள் அந்த இடத்தை காலி செய்ய ரூ. 3 கோடியே 57 லட்சத்து 34 ஆயிரத்து 189 நிவாரணம் அளிக்க அரசு முன்வந்துள்ளது. ஆனால் அதை ஏற்க மசாய் மக்கள் மறுத்துவிட்டனர்.
மறுப்பு:
ராஜ குடும்பத்தினர் வேட்டையாட நிலத்தை பயன்படுத்துவதற்காக மசாய் மக்களை அவர்கள் வசித்து வரும் நிலத்தை விட்டு வெளியேற்றும் திட்டம் இல்லை என்றும், இது குறித்து அடுத்த மாதம் அவர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தான்சானியா இயற்கை வளம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் லசாரோ ந்யாலாண்டு தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் லோலியாண்டேவில் வேட்டையாடும் பார்க் கொண்டு வரும் திட்டத்தை அரசு கைவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications