தான்சானியாவில் ஏரிக்குள் விழுந்த விமானம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு
புகோபா: தான்சானியாவில் ஏரிக்குள் பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

தான்சானியாவின் டார் எஸ் சலாம் நகரில் இருந்து புகோபா நோக்கி 42 பயணிகளுடம் விமான சென்றது. புகோபா விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக பயணிகள் விமானம் தாழ்வாக பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அருகே இருந்த விக்டோரியா ஏரிக்குள் 42 பயணிகளுடன் அந்த விமானம் விழுந்தது.
புகோபா விமான நிலையத்தில் தரை இறங்க நிலையில் மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்தது. இதனையடுத்து உடனடியாக ஏரியில் மூழ்கிய விமானத்தில் இருந்த பயணிகளை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
முதலில் 26 பேர் மீட்கப்பட்டனர்; 3 பேர் பலியாகினர் என செய்திகள் வெளியாகின. தற்போது இச்சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்துவிட்டனர். எஞ்சியவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தான்சானியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தான்சானியாவின் பிரதமர் காசிம் கூறுகையில், விமானம் 100 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது நிலவிய மோசமான வானிலையால் பயணிகளுடன் விக்டோரியா எரிக்குள் விமானம் விழுந்தது. உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனாலும் 19 பேர் சடலமாகவே மீட்கப்பட்டனர் என்றார்.
தான்சானியா விமானம், விக்டோரியா ஏரிக்குள் விழுந்ததற்கு மோசமான வானிலை மட்டும்தான் காரணம் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமாண்டர் வில்லியம் என்பவரும் இந்த விபத்துக்கு வானிலைதான் காரணம் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு கென்யா விமான விபத்தில் 114 பயணிகள் உயிரிழந்தனர்; அதன்பின்னர் 2019-ம் ஆண்டு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 157 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications