பிலிப்பைன்ஸுக்கு 65 முறை விஜயம்... 12,000 பெண்களுடன் உறவு.. மாஜி ஆசிரியர் கைது
டோக்கியோ: பிலிப்பைன்ஸில் 12,000 பெண்களுடன் பணம் கொடுத்து செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட 65 வயது ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜப்பானில் கைது செய்யப்பட்டார். அவர் மீது பிலிப்பைன்ஸ் பெண்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் 4 ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 2 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆசிரியரின் பெயர் யூஹி தகஷிமா. 65 வயதான இவர் யோகஹாமா நகரைச் சேர்ந்தவர். இவர் 14 வயதிலேயே இந்தப் புகாரில் சிக்கியவர். அப்போது இனிமேல் மீண்டும் செய்ய மாட்டேன் என்று உத்தரவாதம் கொடுத்து சிறைத் தண்டனையிலிருந்து தப்பியவர்.
இந்த நிலையில் பிலிப்பைன்ஸில் 2 ஆம்டுகளுக்கு முந்பு 12 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளை அழைத்து அவர்கலை ஆபாசமாக புகைப்படம் எடுத்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து ஜப்பான் போலீஸார் கைது செய்தனர். விசாறணையில் இவர் இத்தனை காலமாக கிட்டத்தட்ட 12,000 பெண்களு"ன் உறவு கொண்டது தெரிய வந்தது.
மேலும் கடந்த 27 ஆண்டுகளில் இவர் 1 லட்சத்து 50 ஆயிரம் ஆபாசப் புகைப்படங்களையும் எடுத்துள்ளார். இவற்ரை 400 ஆல்பங்களாக தொகுத்து வைத்திருந்தார்.
இவர் 1988ம் ஆண்டு பிலிப்பைன்ஸுக்கு டெபுடேஷனில் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு போனவர் பணம் கொடுத்து பல பெண்களுடன் உறவு கொண்டுள்ளார். பிலிப்பைன்ஸுக்கு அதன் பின்னர் அடிக்கடி போக ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 65 முறை அவர் பிலிப்பைன்ஸ் போயுள்ளார்.
இந்த சமயங்களில்தான் அவர் 12,000 பெண்களுடன் உறவு கொண்டுள்ளார்.14 வயது சிறுமி முதல் 70 வயது பாட்டி வரை இவர் யாரையும் விடவில்லையாம்.
இவரது செயல் குறித்து நீதிபதி நவோகா ஓமாரி கூறுகையில், "இவரது செயல் மிகவும் விபரீதமானது. பொருளாதார ரீதியில் பாதிப்புக்குள்ளான சிறுமிகளையும், பெண்களையும் இவர் சுயநலமாக பயன்படுத்தியுள்ளார்.
அது ஜப்பானா்க இருந்தாலும் சரி, பிலிப்பைன்ஸாக இருந்தாலும் சரி, பெண்கள் பாதுகாக்கப்பட வேமண்டும். இவரைப் போன்றவர்களிடமிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். அதுவும் ஆசிரியராக இருந்த இவரது செயல் ஏற்றுக் கொள்ள முடியாதது" என்று கூறினார்.