பாக். போலீஸ் பயிற்சி மையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 7 போலீசார் காயம், 200 பேர் சிறைபிடிப்பு
குவெட்டா: பாகிஸ்தான் குவெட்டா நகரில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் புகுந்து தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 7 போலீசார் காயமடைந்தனர். 200 பயிற்சி போலீசாரை தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் குவெட்டா நகரில் காவலர் பயிற்சி மையம் உள்ளது. இதில் சுமார் 500 போலீசார் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில் அந்த மையத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்த துவங்கினர்.

இதில் 7 போலீசார் காயம் அடைந்ததாகவும் 200க்கும் மேற்பட்ட பயிற்சி போலீசார் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 முதல் 6 தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தெரிவித்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பாகிஸ்தான் படையினர், சம்பவ இடத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தை பலுசிஸ்தான் உள்துறை அமைச்சர் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த தாக்குதலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் தாயர் நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்த போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications