தாய்லாந்து மன்னரின் நாய் டாங் டேங் மரணம்.. அவமதிப்பு வழக்கில் தொழிலாளி சிறை செல்லக் காரணமானது!

Subscribe to Oneindia Tamil

பாங்காக்: தாய்லாந்து மன்னரின் செல்ல நாயான டாங்டேங் திடீரென மரணமடைந்து விட்டதால், மன்னர் மிகவும் சோகத்தில் இருக்கிறாராம்.

தாய்லாந்தில் மன்னராக தற்போது பூமிபால் அதுல்யாதெஜ் என்பவர் ஆட்சி நடத்தி வருகிறார். அங்கு மன்னரை விமர்சிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் வகையில் சட்டம் அமலில் உள்ளது.

Thai king's dog, Khun Tongdaeng, dies days after 'insult' arrest

பூமிபால், டாங்டேங் என்ற செல்ல நாயை வளர்த்து வந்தார். தனது செல்ல நாயின் குணநலன்களைக் கூறும் வகையில் அவர் புத்தகம் ஒன்றும் எழுதியுள்ளார்.

பிரபலம்...

அந்தப் புத்தகமானது ஹாரிபார்ட்டர் புத்தகம் போல் தாய்லாந்தில் அமோகமாக விற்பனையானது. இதனால் ஊடகங்களில் டாங்டேங் பிரபலமானது.

கைது...

சமீபத்தில் இந்த நாயை சமூகவலைதளத்தில் கிண்டல் செய்ததற்காக தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது ராணுவ கோர்ட்டில் அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது.

மரணம்...

இந்நிலையில், கடந்த 26ம் தேதி இரவு அரண்மனை வளாகத்தில் டாங்டேங் தூக்கிக் கொண்டிருந்தது. அப்போது தூக்கத்திலேயே அதன் உயிர் பிரிந்தது.

சோகம்...

செல்ல நாயின் மரணத்தால் தாய்லாந்து மன்னர் மிகவும் சோகமான மனநிலையில் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+