3 மனைவிகள்.. 7 குழந்தைகள்.. 4-ஆவதாக பாதுகாப்பு அதிகாரியை மணந்தார் 66 வயது தாய்லாந்து அரசர்!
பாங்காங்: தாய்லாந்தில் பாதுகாப்பு அதிகாரியை அந்நாட்டு அரசர் வஜ்ரலங்கோன் மணந்தார். இதன் மூலம் அந்த அதிகாரி புதிய பட்டத்து அரசியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் கடந்த 70 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த மன்னர் அதுல்யதேஜ் கடந்த 2016-ஆம் ஆண்டு மரணமடைந்தார். இதையடுத்து அவரது மகன் வஜ்ரலங்கோன் (66) வரும் 4ஆம் தேதி தாய்லாந்தின் புதிய மன்னராக முடிசூட உள்ளார். இவர் அரசர் ராமா 10 எனவும் அழைக்கப்படுகிறார்.
மே மாதம் 4 முதல் 6- ஆம் தேதி வரை இந்த முடிசூட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

திருமணம்
இந்த நிலையில் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த 40 வயதான சுதிடா திட்ஜாய் என்பவரை வஜ்ரலங்கோன் இன்று திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர் புதிய பட்டத்து அரசியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தனிமை
கடந்த 2014-ஆம் ஆண்டு சுதிடாவை தனது பாதுகாப்பு அதிகாரிகளின் துணைத் தலைவராக வஜ்ரலங்கோன் நியமித்தார். இருவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாகவும் அரண்மனையில் அவ்வப்போது தனிமையில் இருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன.

பிராமணர் முறைப்படி
இந்த நிலையில் சுதிடாவை திருமணம் செய்து கொண்டதன் மூலம் அத்தகைய சர்ச்சைகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார். இவர்களது திருமணம் புத்த மதம் மற்றும் பிராமணர் முறைப்படி விமரிசையாக நடந்தது.

7 குழந்தைகள்
இதைத் தொடர்ந்து சனிக்கிழமை இருவரும் ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவர். வஜ்ரலங்கோன் ஏற்கனவே திருமணம் செய்து 3 முறை விவாகரத்து பெற்றவர். அவருக்கு 7 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 4-ஆவதாக சுதிடாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications