தாய்லாந்தில் பிரதமருக்கு எதிராக தீவிர போராட்டம் - ராணுவ தலைமை அலுவலகம் முற்றுகை!

Subscribe to Oneindia Tamil

பாங்காக்: தாய்லாந்து பிரதமர் யங்லக் ஷினாவத்ராவை பதவி விலக கோரி எதிர்க்கட்சியினர் ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை பிரதமர் தோற்கடித்தார். சமரச பேச்சுவார்த்தைக்கு பிரதமர் விடுத்த அழைப்பையும் போராட்டக்காரர்கள் நிராகரித்தனர்.

இதனை அடுத்து போராட்டம் மேலும் தீவிரம் அடைந்து வருகிறது. தலைநகர் பாங்காக்கில் 5 இடங்களில் பேரணி மற்றும் முற்றுகை போராட்டம் நடந்தன. சுமார் 1,000 பேர் பேரணியாக ராணுவ தலைமை அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். பிறகு கேட்டை தாண்டி அலுவலக வளாகத்திற்குள் புகுந்து முற்றுகையிட்டார்கள்.

இதனால் அலுவலகத்தை சுற்றி ராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டனர். இதே போல ஆளுங்கட்சி அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டு பிரதமரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+