Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடுக்கடலில் கவிழ்ந்த கப்பல்.. 64 உயிர்கள் பலியான சோகம்

Subscribe to Oneindia Tamil

அண்டனானரிவோ: மடகாஸ்கர் அருகே நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தின் தீவு நாடான மடகாஸ்கரில் இருந்து சுமார் 130 பயணிகளை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று நேற்று முன்தினம் இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இந்த விபத்தில் கப்பலில் பயணிகள் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

சிலர் நீச்சல் தெரியாததால் சிறிது நேரத்திலேயே தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இதனையடுத்து மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது வரை கப்பலில் இருந்த 130 பேரில் 45 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

The death toll from a Madagascar shipwreck has risen to 64

விபத்து குறித்து வெளியான முதற்கட்ட தகவலில் சரக்குகளை ஏற்றிச்செல்லும் கப்பலில் சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளதாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக வேகமாக சென்று பாறையில் மோதி விபத்து ஏற்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அந்நாட்டின் துறைமுக அதிகார தலைவர் ஜீன் எட்மண்ட் தெரிவித்துள்ளார்.

கடலோர காவல் படையினர் உதவியுடன் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இறந்தவர்கன் உடல்கள் மீட்கப்பட்டன. தண்ணீரில் தத்தளித்த சுமார் 45 பேர் உயிருடன் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டனர். இன்று காலையில் செய்ன்ட் மாரே தீவுகள் அருகே 25 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன்மூலம், பலி எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20 பேரை காணவில்லை. அவர்களை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+