குடும்ப வன்முறையால் பாதிப்பா? - கைகளில் “கருப்புப் புள்ளி” வைங்க பெண்களே!
லண்டன்: லண்டனில் குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்களை பாதுகாக்க மற்றும் உதவ ஒரு புதிய திட்டம் தொடங்கியுள்ளார் ஒரு பெண்மணி.
கணவர்களால் அடித்து துன்புறுத்தப்படும் மனைவிகள் இந்தப் பிரச்சனை தொடர்பாக உடனடியாக போலீசாரிடமோ, மற்றவர்களிடமோ தெரிவிப்பது குடும்ப உறவில் சிக்கலை ஏற்படுத்தலாம் அல்லது அந்தப் பெண்ணுக்கே பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இதுபோல தனிநபரின் மீது நடத்தப்படும் வன்முறைகளைப் பற்றி "சொல்லாமல் பிறருக்குச் சொல்ல" உள்ளங்கையில் கருப்புப் புள்ளி வைக்கச் சொல்லி இதன்மூலம் பாதிக்கப்படுவோரை அடையாளம் கண்டு அவர்களது பிரச்சனையிலிருந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஒரு பெண்மணி.
இவரும் குடும்ப வன்முறையால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர். அவர் ஒரு பேஸ்புக் பக்கத்தை தொடங்கி அதில் இதுபற்றிய கருத்தை பரப்பி வருகின்றார். இது இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.
இந்த விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கியிருக்கும் பெண்மணி பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் இதன் மூலம் காப்பாற்றப்பட்டு வருவதாகக் கூறினார். மேலும், இது தொடர்பாக அனைத்து பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைவருக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications