தி அப்சர்வர்: இன்று உலகின் முதல் ஞாயிறு செய்தித்தாளின் பிறந்த நாள்...
லண்டன்: கிட்டத்தட்ட 222 ஆண்டுகளுக்கு முன்பு இன்று தான் உலகின் முதல் ஞாயிறு செய்தித்தாள் வெளியிடப்பட்டது.
தி அப்சர்வர் என்ற பெயரில், 1791 டிசம்பர் 4ம் தேதி தான் முதல் ஞாயிரு செய்தித்தாள் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது.
ஆரம்பத்தில் அரசு மானியத்துடன் வெளிவந்த இந்த செய்தித்தாளை டபிள்யூ.எஸ்.போர்ன் என்பவர் வெளியிட்டார்.

16 ஆசிரியர்கள்....
எபிள்யூ.எஸ்.போர்ன்க்குப் பிறகு கிட்டத்தட்ட எட்டு பேரிடம் கைமாறிய ‘தி அப்சர்வர்' செய்தித்தாளில், இதுவரை 16 பேர் ஆசிரியர்களாக இருந்துள்ளனர்.

இரண்டு நூற்றாண்டுகள்....
222 வருடங்களாக வெளியாகும் அப்சர்வர் தற்போது 2லட்சத்து 16 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனையாகிறது. கால ஓட்டத்திற்கேற்ப அதன் வளர்ச்சியும் வேறுபட்டது.

மறுப்பு....
உளவாளி என குற்றம்சாட்டப்பட்டு, பர்சாத் பசோப்ட் எனும் அப்சர்வரின் செய்தியாளர் 1990ல் ஈராக்கில் தூக்கில் போடப்பட்டார். பிறகு அது தவறான தகவல் என மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.

இணையத்தில்....
2005ல் இணைய உலகில் அடியெடுத்து வைத்த அப்சர்வர், பத்திரிகையின் உள்நிர்வாகத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மக்களுக்கு பகிரங்கப்படுத்துகிற பழக்கத்தை மக்களிடம் தொடங்கி வைத்தது.

எகிப்தில் தடை....
2008ல் முகமது நபி பற்றிய கார்ட்டூன்களை வெளியிட்டதால் எகிப்தில் அப்சர்வர் தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தி கார்டியன்...
தி அப்சர்வரின் சகோதர பத்திரிகையாக தி கார்டியன் எனும் புகழ்பெற்ற நாளிதழ் வெளியாகிறது.

நியூஸ் ரூம்....
தங்களின் அனைத்து ஆவணங்களும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் லண்டன் நகரில் நியூஸ் ரூம் என்ற மையத்தை அப்சர்வரும் கார்டியனும் இணைந்து நடத்துகின்றன.

இணைய ஆவண வசதி....
1791 முதல் 2003 வரை அப்சர்வரின் பழைய பத்திரிகைகள் இணைய தளத்திலும் கிடைக்கும் வசதியை 2007ல் அறிமுகப் படுத்தியது அப்சர்வர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications