காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.. கண்ணீர் விட வைக்கும் ஒரு பாசக் கதை
இறந்து போன எஜமானர் வருவார் என 80 நாட்களாக ஒரு நாய் காத்திருக்கிறது.
Recommended Video
பெய்ஜிங்: "எங்க அந்த நாய்"... என்று ரோட்டில் போறவங்க.. வர்றவங்க.. எல்லாருமே அந்த நாயைதான் திரும்பி திரும்பி பார்த்து கொண்டே போகிறார்கள், வருகிறார்கள்!!
அங்கு மட்டும் இல்லை... இந்த நாய் பத்தின வீடியோவை பார்த்தவர்களும், திரும்ப திரும்ப அதையே பார்த்து வருகிறார்கள். சீனாவின் பியர் வீடியோ இணையதளம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
சீனாவில் ஹோட் என்ற நகரில் பெண் ஒருவர் இந்த நாயை வளர்த்து வந்துள்ளார். அந்த அம்மாவுக்கு இந்த நாய் ரொம்பவும் க்ளோஸ் ஆகிவிட்டது. ரெண்டு பேரும் சாப்பிடும்போதும், தூங்கும்போதும் ஒருவரையொருவர் பிரிவதே இல்லை.
மகள் என பாசமழை பொழிந்து.. மயக்கம் கொடுத்து நண்பர்களுடன் சீரழித்த காமுகன் கைது.. தஞ்சையில் பரபரப்பு
அடக்கம் செய்யப்பட்டார்
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி அந்த அம்மா திடீரென சாலை விபத்தில் இறந்து விட்டார். அவர் உயிரிழந்த அடுத்த கணமே தனக்கு தெரிந்த மொழியில் அந்த நாய் அழுதது... போலீசார் வரும்வரையில் அந்த அம்மாவை விட்டு எங்குமே நகராமல் பாதுகாப்பாக நின்று கொண்டது. பிறகு போலீசார் விரைந்து சடலத்தை கொண்டு சென்று... அடக்கமும் செய்யப்பட்டு விட்டது.
கண்ணீர் மல்க நிற்கிறது
ஆனால் எந்த இடத்தில் அந்த அம்மா செத்துபோனார்களோ, அந்த இடத்தில் நின்ற நாய், இன்னமும் அதே இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறது. தன்னை வளர்த்த அம்மா எப்படியும் வந்துவிடுவார்கள், நம்மை வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போவார்கள் என்று இன்னமும் காத்து கொண்டிருக்கிறது. ஓனர் அம்மா இறந்து இப்போது 80 நாட்களுக்கும் மேலாகி விட்டது. சாலையோரம் இப்படி நாய் காத்திருப்பதை அப்பகுதியில் உள்ளவர்கள் கண்ணீர் மல்க பார்த்து செல்கின்றனர்.
நெருங்கவே விடவில்லை
அந்த பக்கமாக யார் போனாலும் சரி... அந்த நாய்க்கு கொஞ்சம் சாப்பாடு தருகிறார்கள். முக்கியமாக டாக்ஸி டிரைவர்கள், சாப்பாட்டை தருவதுடன், அதை வளர்க்கலாம் என்று ஆசைப்பட்டு நெருங்கினால், தூரமாக போய் அந்த நாய் தனியாக நின்று கொள்கிறதாம். யார் கூப்பிட்டாலும் வருவதே கிடையாதாம்.
உணர்ச்சி பிழம்புகள்
இந்த காத்திருப்பு வீடியோ காட்சிதான் உலகம் முழுவதும் வைரல் ஆகியுள்ளது. "நாய் மாதிரி காத்துக்கிட்டு கிடந்தேன்" என்று நாம ரொம்ப ஈசியா வார்த்தைகளை சொல்லி விடுகிறோம். ஆனால் எதிர்பார்த்து காத்திருப்பது என்று வந்துவிட்டால் நாய் என்ன? மனிதன் என்ன? எல்லாமே வெளிக்காட்ட முடியாத உணர்ச்சி பிழம்புகள்தான்!! எல்லாமே ஆழமான உறவுகளின் வெளிப்பாடுகள்தான்! அவர் வருவாரா???