ஈரானின் இன்னொரு முக்கிய தலைவரை கொல்ல திட்டம்.. அமெரிக்கா போட்ட ஸ்கெட்ச்.. கடைசியில் என்ன ஆனது?
ஈரானின் குவாட்ஸ் படை தளபதி சுலைமானியை கொலை செய்த அதே நாளில் இன்னொரு ஈரான் படையை சேர்ந்த முக்கிய தளபதியை கொலை செய்யவும் அமெரிக்கா திட்டமிட்டு இருந்துள்ளது.
டெஹ்ரான்: ஈரானின் குவாட்ஸ் படை தளபதி சுலைமானியை கொலை செய்த அதே நாளில் இன்னொரு ஈரான் படையை சேர்ந்த முக்கிய தளபதியை கொலை செய்யவும் அமெரிக்கா திட்டமிட்டு இருந்துள்ளது. இவரின் பெயர் அப்துல் ரெசா ஷாலாய்.
ஈரானும் அமெரிக்காவும் போருக்கு உண்டான அனைத்து விஷயங்களையும் கடந்த இரண்டு வாரமாக செய்து வருகிறது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் கடந்த வாரம் டிரோன் விமானம் மூலம் நடத்தியது. ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதற்கு பதிலடியாக ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் 2 விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது உக்ரைனின் விமானம் ஒன்று ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 176 பேர் பலியானார்கள்.

எப்படி
ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி அந்நாட்டை மொத்தமாக கட்டுப்படுத்தி வந்தவர். அந்நாட்டிலேயே அதிக சக்தி வாய்ந்த நபர் இவர்தான். ஈரானில் முக்கிய முடிவுகளை எடுக்க கூடிய ராணுவ தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முதல் நாள் இவரின் இறுதி ஊர்வலம் நடந்தது.

இன்னொரு நபர்
அதேபோல் ஈரானில் மூன்றாவது சக்தி வாய்ந்த நபர் என்று பார்க்கப்பட்டவர் அப்துல் ரெசா ஷாலாய். இவர் ஈரான் குவாட்ஸ் படையில் சுலைமானிக்கு அடுத்தகட்டமாக அதிக சக்தி வாய்ந்த நபர் என்று அடையாளப்படுத்தப்பட்டவர். சுலைமானி எப்படி ஈராக்கை கட்டுப்படுத்தி வந்தாரோ அதேபோல் ரெசா ஷாலாய் ஏமனை கட்டுப்படுத்தி வந்தார்.

நாடுகள்
ஈராக்கில் நடக்கும் புரட்சிக்கும், ஏமனில் நடக்கும் போருக்கும் இவர்கள் இருவர்தான் காரணம். ஈரான் இவர்கள் இருவரை வைத்துதான் அண்டை நாடுகளில் போரை நடத்தி வருகிறது. இவர்களை கொன்றுவிட்டால், போரில் வென்றுவிடலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது. இதனால்தான் சுலைமானியை அமெரிக்கா டிரோன் தாக்குதல் மூலம் கொன்றது.

மிக மோசம்
ஈரானின் குவாட்ஸ் படை தளபதி சுலைமானியை கொலை செய்த அதே நாளில் ரெசா ஷாலாயை கொலை செய்யவும் அமெரிக்கா திட்டமிட்டு இருந்துள்ளது. அப்போது அவர் ஏமனில் இருந்துள்ளார். ஆனால் அவரை கொலை செய்யும் போது கடைசி நேரத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக கைவிடப்பட்டது. டிரோனில் முக்கிய கோளாறு ஏற்பட்டுள்ளது.

என்ன போர்
சுலைமானியின் இடது கையாக ரெசா ஷாலாய் பார்க்கப்படுகிறார். ஒருவேளை இவரையும் அமெரிக்கா கொன்று இருந்தால் ஈரான் மொத்தமாக தலைவர் இல்லாத, பாதுகாப்பு இல்லாத நாடாக மாறி இருக்கும். அதேபோல் இவரை கொன்று இருந்தால் அது உடனடியாக போருக்கு வழி வகுத்து இருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் போய் உள்ளது.
-
குவைத் ஏர்போர்ட் தாக்குதல்.. அமெரிக்காவின் தவறு! ஈரான் பரபர குற்றச்சாட்டு.. மறுக்கும் டிரம்ப்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications