அடுப்படியில் சப்பாத்தி சுடச் சொன்னார்கள்: இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹம் பேட்டி
லண்டன்: வீட்டில் அமர்ந்து சப்பாத்தி சுடத் தான் நான் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் தெரிவித்ததாக அவரின் முன்னாள் மனைவி ரெஹம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் பத்திரிக்கையாளர் ரெஹமை கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து அக்டோபர் மாதம் விவாகரத்து செய்தார்.
இந்நிலையில் விவாகரத்து குறித்து ரெஹம் முதன்முதலாக பேட்டி அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
சப்பாத்தி
நான் சமையல் அறையில் இருந்து சப்பாத்தி சுட வேண்டும். வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று என்னிடம் தெரிவித்தார்கள். நான் எங்கும் வெளியே செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தார்கள்.
இம்ரான் கான்
நான் அதிகமாக பேசுவேன். இம்ரான் கானுடன் பேச முயற்சித்துள்ளேன். அவருடன் அரசியலை பற்றி மட்டுமே பேச முடியும். பாலிவுட் படங்களை பற்றி கூட பேச முடியாது.
திருமணம்
வருமானம் நின்றுள்ளதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டும். என்னை காதலிப்பதாக அவர் கூறியதை நம்பினேன். ஆனால் இருவரும் வித்தியாசமானவர்கள் என்றார் ரெஹம்.
கட்சி
ரெஹம் இம்ரான் கானை அடித்து நொறுக்கியதாகவும், அவரது கட்சியை கைப்பற்ற நினைத்ததாகவும் இம்ரானுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.