செவ்வாய் கிரகத்தை ஆராயப் போய் மூளை டயர்ட் ஆகிப் போனதுதான் மிச்சம் இவர்களுக்கு!
மாஸ்கோ: செவ்வாய் கிரகத்திற்கு சென்று ஆராய்ச்சி செய்வதற்காக சுமார் ஒன்றரை ஆண்டுகள் தனிமைப்படுத்தப்பட்ட விண்வெளிவீரர்கள் மன அழுத்தத்திற்கும், வெறுமையான மனநிலைக்கும் தள்ளப்பட்டதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பூமியில் இருந்து சுமார் 140 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம். இந்தக் கிரகம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக கடந்த 2010ம் ஆண்டு ஆறு விண்வெளி வீரர்கள் ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவிற்கு அருகே உள்ள இடத்தில் தனிமையில் தங்க வைக்கப்பட்டனர்.
விண்வெளியில் தங்கி ஆய்வு செய்வதற்காக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுகள் அந்த 6 பேரும் தனிமையில் தங்க வைக்கப்பட்டனர்.

சோதனைகள்...
அப்போது ஒவ்வொரு 60 நாட்களுக்கு ஒருமுறையும் அந்த வீரர்களுக்கு இ இ ஜி பரிசோதனை, எச்சில் பரிசோதனை உள்ளிட்ட பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் மூலம் அவர்களின் உடல்நிலை மற்றும் மூளையின் செயல்பாடு குறித்து கண்காணிக்கப்பட்டது.

மன அழுத்தம்...
இந்தக் காலகட்டத்தில் அந்த வீரர்களின் மனநிலை குறித்தும் ஆராயப் பட்டது. அதில், நீண்ட காலமாக தனிமையில் வசித்ததால், அந்த வீரர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பது தெரிய வந்தது. ஆனால், இந்த மன அழுத்தத்தின் பாதிப்பு தற்காலிகமாகவே இருந்துள்ளது. இதனால், விண்வெளி வீரர்கள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டுள்ளது.

பயிற்சிகள்...
ஆனபோதும் செவ்வாயில் இறங்கி ஆராய்ச்சி மேற்கொள்ளப் போகும் விண்வெளி வீரர்களுக்கு, நிச்சயமாக அந்தப் பயணம் வெறுமையானதாக, தனிமை காரணமாக மன அழுத்தத்தைத் தருவதாக அமையும் என ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்கள், சில பயிற்சிகள் மூலம் தங்களைத் தாங்களே வீரர்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆய்வின் நோக்கம்...
செவ்வாய் கிரகத்தில் யாருமே இல்லை. இப்படிப்பட்ட நிலையில் இதுபோன்ற பயணத்தை மேற்கொள்வோருக்கு நிச்சயம் அது மிகுந்த போரடிக்கும் சமாச்சாரமாக மட்டுமல்லாமல் பைத்தியம் பிடித்தும் விடும் நிலையும் கூட மனோரீதியாக ஏற்படும் என்பதே இந்த ஆய்வின் சாராம்சமாக உணரப்பட்டுள்ளது.

மார்ஸ்500...
இந்த ஆய்வுக்குட்படுத்தப்பட்ட ஆறு விண்வெளி வீரர்களுமே தாங்களே முன்வந்து இந்த சோதனைக்கு உட்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வுக்கு மார்ஸ் 500 என்பது பெயராகும்.

ஆறுதல்...
தற்போது செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளது என்பது தெரிய வந்துள்ளதால், ஒரு நாளையே மனிதன் அங்கு போனாலும் கூட தோட்டம் போட்டு பாத்தி கட்டி பாசனம் செய்து பொழுது போக்க ஒரு வழி ஏற்பட்டுள்ளது என்று ஆறுதல் கொள்ளலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications