இவங்களுக்கு ஓட்டுப் போடுறதுக்கு செத்துப் போய்டலாம்.. அமெரிக்காவை அலற வைத்த "பாட்டி"!
வாஷிங்டன்: அமெரி்க்காவைச் சேர்ந்த மேரி ஆன் நோலன்ட் புற்றுநோயுடன் போராடி தோல்வியுற்று மரணத்தைத் தழுவினார். ஆனால் இப்போது அவரது மரணம் அங்கு வைரல் ஆகியுள்ளது. காரணம் - அவரது குடும்பம் வெளியிட்ட இரங்கல் குறிப்பு.
விர்ஜீனியாவைச் சேர்ந்தவர் மேரி ஆன் நோலன்ட், அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தின் ரிச்மான்ட் நகரைச் சேர்ந்தவர். 68 வயதான இந்தப் பாட்டிக்கு புற்றுநோய் இருந்து வந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மே மாதம் இவர் மரணமடைந்தார்.

இந்த நிலையில் அவரது குடும்பம் ஒரு இரங்கல் குறிப்பை வெளியிட்டிருந்தது. அது வைரல் ஆகியுள்ளது. காரணம், அந்த. இரங்கல் குறிப்பில் இடம் பெற்றிருந்த நக்கல், நையாண்டிதான்.
அதில், "ஹிலரி கிளிண்டனுக்கோ அல்லது டொனால்ட் டிரம்ப்புக்கோ ஓட்டுப் போடுவதை விட மரணமே மேலானது என்று நினைத்ததால் மேரி ஆன் நோலன்ட் மரணத்தைத் தழுவிக் கொண்டார். இந்த சிக்கலில் மாட்டிக் கொள்வதை விட மரணமே மேல் என்று அவருக்குத் தோன்றியுள்ளது என்று அந்த இரங்கல் குறிப்பு கூறுகிறது.

நவம்பர் 8ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலரியும், குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப்பும் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மேரியின் கணவர் ஜிம் நோலன்ட் கூறுகையில், இது எனது மகன்களில் ஒருவர் எழுதிய குரிப்பு. இது யாரையும் தாக்கும் நோக்கில் எழுதப்படவில்லை. மாறாக அரசியல் நிலவரத்தை வைத்து எழுதப்பட்ட ஹேஷ்யமான கருத்துதான் என்று கூறியுள்ளார்.
நல்லா கிளப்புறீங்கய்யா பீதியை!












Click it and Unblock the Notifications