சபாஷ்.. ரோட்டில் கிடந்த புத்தகங்களை சேகரித்தே நூலகம் அமைத்து அசத்திய தூய்மை பணியாளர்கள்!
இஸ்தான்புல்: தெருவில் வீசப்பட்ட புத்தகங்களைக் கொண்டு நூலகம் அமைத்திருக்கிறார்கள் துருக்கியின் தூய்மைப் பணியாளர்கள்.
துருக்கி நாட்டின் தலைநகர் அங்காராவில், குப்பைகள் அகற்றும் தூய்மைப் பணியாளர்கள் இணைந்து நூலகம் அமைத்திருக்கிறார்கள். தெருவோரம் வீசப்படும் புத்தகங்கள் மற்றும் குப்பைகளோடு குப்பைகளாக கிடைக்கும் புத்தகங்களை சேகரித்து வைத்தனர்.
நாளாக நாளாக அந்த புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அந்த புத்தகங்களை வைத்து என்ன செய்வதென யோசித்தார்கள் துப்புரவு பணியாளர்கள். அதற்குள்ளாக ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் வந்துவிட்டது.
துப்புரவுப் பணியாளர்கள் தொடர்ந்து புத்தகங்கள் சேகரிப்பதைப் பார்த்த துருக்கி மக்கள், தங்கள் வீடுகளில் இருக்கும் புத்தகங்களையும் அவர்களிடம் கொடுத்துவந்தனர். இந்த புத்தகங்களைப் தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினரும் தூய்மைப் பணியாளர்களும் படித்து வந்தனர்.

நூலகம்
பலர் இவர்களிடம் வந்து புத்தகங்கள் வாங்கிப் படித்துச் சென்றனர். இவர்கள் புத்தகம் சேமிக்கும் பழக்கம் தூய்மை இயக்கத்தைத் தாண்டி துருக்கி நகர் முழுவதும் தெரியவந்தது. இதையடுத்து, நூலகம் அமைக்கத் திட்டமிட்டார்கள் தூய்மைப் பணியாளர்கள்.

செங்கல் தொழிற்சாலையில்
துருக்கி தலைநகர் அங்காராவில், நூலகம் அமைக்க அரசின் ஆதரவு கிடைத்தது. உள்ளூர் அரசாங்கத்தின் ஆதரவுடன், செப்டம்பர் 2017-ல் அங்காகராவில் நூலகம் திறக்கப்பட்டது. துப்புரவுத் துறைக்குச் சொந்தமான பழைய செங்கல் தொழிற்சாலையில் நூலகம் தொடங்கப்பட்டது.

புத்தகங்கள்
தங்களுக்குக் கிடைத்தப் புத்தகங்களை பிரித்து அடுக்கத் தொடங்கினர். குழந்தைகளுக்கான இலக்கியங்கள், அறிவியல் புத்தகங்கள், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழி என மொழிவாரியாகவும் புத்தகங்கள் பிரிக்கப்பட்டு நூலகம் அமைக்கப்பட்டது. அதோடு, சதுரங்கம் விளையாடக்கூடிய ஓய்வறையும் இங்கு உள்ளது. புத்தகத்தை அங்கேயே படிக்கலாம் அல்லது வீட்டுக்கு எடுத்துச் சென்றும் படிக்கலாம். வீட்டுக்கு எடுத்துச் செல்லும் புத்தகங்களை இரண்டு வாரங்களுக்குள் கொடுக்க வேண்டும். மற்ற எல்லா நூலகத்தைப் போலவே, வாசகர்களும் தங்கள் உறுப்பினர் உரிமத்தைப் புதுப்பித்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக இந்த நூலகத்தின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உறுப்பினர்
இந்த நூலகத்தைப் பாதுகாக்க முழு நேர ஊழியர்களை பணியமர்த்தி உள்ளது துருக்கி அரசு. இந்த நூலகம் பெரும்பாலும் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளால் நிரம்பி இருக்கும். மேலும் அருகில் உள்ள பள்ளி குழந்தைகளும் இந்த நூலகத்துக்கு வருவதை மகிழ்ச்சியளிப்பதாக தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர், யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்த நூலகம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது ஆறாயிரத்துக்கும் அதிகமான புத்தகங்களால் இந்த நூலகம் நிரம்பி வழிகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications