அசராத சீனா.. டிரம்ப் 50% வரி விதிப்பேன் என சொல்லியும்.. விரைவில் 'தீபாவளி' பரிசு!
அமெரிக்கா - ஈரான் போர் மத்தியில் சைலெண்டாக மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது சீனா, ஈரானுக்கு வர்த்தகம் மூலம் தொடர்ந்து நிதியுதவி அளிப்பதில் துவங்கி ஐநா-வில் ஈரானுக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவை சீனா தனது வீட்டோ பவர் பயன்படுத்தி தடுத்தது வரையில் பல வகையில் ஈரானுக்கு துணையாகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் நிற்கிறது சீனா.
இந்த நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் உடனான போர் நிறுத்தம் அறிவித்த பின்பு, ஈரானுக்கு ராணுவ ஆயுதங்கள் வழங்கும் நாடுகள் மீது 50 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்தார், மேலும் இதை உடனடியாக அமலாக்கம் செய்யப்படும் எனவும் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு மூலம் சீனா-வை மறைமுகமாக டார்கெட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வரி விதிப்பால் திங்கள்கிழமை பங்குச்சந்தை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீனாவின் முக்கிய பங்குச்சந்தை சிறிய சரிவுடன் வர்த்தகமானது. ஷாங்காய் காம்போசிட் இன்டெக்ஸ் காலை நேரத்தில் வெறும் 0.39 சதவீதம் சரிந்து 3,971 புள்ளிகளில் வர்த்தகமானது. ஆனால் அடுத்த ஒரு மணிநேரத்தில் அனைத்து முக்கிய குறியீடுகளும் உயர்வுடன் வர்த்தகமாக துவங்கியது.
இதனால் அமெரிக்காவின் வரி விதிப்பு பதற்றம் துளியும் இல்லாமல் சீன சந்தை வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் ஷாங்காய் காம்போசிட் இன்டெக்ஸ் 2.80 சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்தாலும், கடந்த ஆண்டை விட 21.69 சதவீதம் அதிகமாகவே உள்ளது.
அமெரிக்கா-ஈரான் பதற்றத்தின் தாக்கம்
அமெரிக்காவும் ஈரானும் அமைதி ஒப்பந்தம் எட்ட முடியாமல் தோல்வியடைந்த பிறகு, அமெரிக்க கடற்படை ஈரானிய துறைமுகங்களை முடக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் தலைமையில் நடைபெற்ற பேச்சுகள் வெற்றி பெறாததால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது அமெரிக்கா. இந்த நிலையில் சீன பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டனர்.
சீனாவுக்கு 50% வரி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை ஈரானுக்கு எதிரான எச்சரிக்கைகளை வீடுத்தார். அதே நேரத்தில் சீனாவையும் குறிவைத்து பேசினார். அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகளின்படி, சீனா ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்க தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக டிரம்ப் சீனா மீது 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இது சர்வதேச வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
உளவுத்துறை தகவல்
அமெரிக்க உளவுத்துறை முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. சீனா அடுத்த சில வாரங்களில் ஈரானுக்கு புதிய வான்பாதுகாப்பு அமைப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக CNN செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்தது.
குறிப்பாக MANPAD எனப்படும் தோளில் தூக்கிச் செல்லும் வகையிலான சிறிய ஏவுகணை அமைப்புகளை அனுப்ப ஏற்பாடுகள் நடைபெறுவதாக உளவு அறிக்கைகள் கூறுகின்றன. இந்த ஏவுகணைகள் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த ஆயுதங்கள் ஆகும். இது ஈரானுக்கு மிகப்பெரிய தீபாவளி பரிசாக இருக்கும்.
மூன்றாம் நாடுகள் டார்கெட்
சீனா இந்த ஆயுதங்களை நேரடியாக அனுப்பாமல் மூன்றாம் நாடுகள் வழியாக ரகசியமாக அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஏற்றுமதியின் உண்மையான இடத்தை அதாவது தயாரிப்பு, ஷிப்பிங் செய்யப்படும் இடத்தை மறைக்க முயற்சி செய்யப்படுகிறது. இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான்-அமெரிக்கா இடையேயான இரு வார இடைக்கால போர் நிறுத்தம் கடந்த புதன்கிழமை தொடங்கிய நிலையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிரம்ப்-ன் சலுகை
சீனா ஈரானுக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்வது, டிபம்ப் 50 சதவீத வரி விதிப்பது போன்ற அறிவிப்புக்கு மத்தியிலும் டிரம்ப் சீனாவை நேரடியாகவும், கடுமையாகவும் கண்டிக்க முடியாத நிலையில் உள்ளார்.
சீனாவின் ஆயுத ஏற்றுமதி குறித்து பேசிய டிரம்ப், சீனா இத்தகைய செயலை செய்யாது என நம்புகிறேன் என கூறியதுடன் அமெரிக்கா சீனாவுக்கு உள்நாட்டு எண்ணெய் மற்றும் வெனிசுவேலா எண்ணெயை வழங்க தயாராக இருப்பதாகக் கூறினார். வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் கட்டுப்பாட்டை கைப்பற்றிய நிலையில் இத்தகைய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மறுபுறம் சீனா, ஈரான்-அமெரிக்க இடையேயான தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் தான் முக்கிய பங்கு வகித்துள்ளது.
சீனா சுற்றுப்பணம்
இத்தகைய சூழ்நிலையில் அடுத்த மாதம் தொடக்கத்தில் டிரம்ப் சீனாவுக்கு செல்ல உள்ளார். இந்த பயணத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் எப்படி மாறும் என்பது முதலீட்டாளர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கண்கள் சிவந்த டிரம்ப்.. திடீரென சீனா பக்கம் திரும்பி நேரடி வார்னிங்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
ஈரானுக்கு ரகசிய ஆயுத சப்ளை செய்யும் சீனா.. ஆனா ரூட்டு வேற.. கொந்தளிக்கும் அமெரிக்க உளவுத்துறை! -
அமைதி பேச்சுவார்த்தையின் முக்கிய கட்டம்.. பாக்., பிரதமரை சந்தித்த அமெரிக்க துணை அதிபர்! -
டிரம்ப்-ஐ கலாய்க்கும் ஈரான் தலைவர்.. அமெரிக்க மக்களை வெறுப்பேத்திய போட்டோ.. என்ஜாய் பண்ணுங்க! -
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.. கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. மீண்டும் 120 டாலரா? -
ஹார்முஸ் நீரிணை.. கட்டுப்பாட்டை கையில் எடுக்கும் US! டிரம்ப் போட்ட உத்தரவால் இந்தியாவுக்கு சிக்கல் -
சென்செக்ஸ் 1600 புள்ளிகள் சரிவு.. ஆடிப்போன பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. இது வெறும் டிரைலர் தான்! -
அலர்ட்..! சென்செக்ஸ், நிஃப்டி பெரும் சரிவு.. வந்தது முக்கிய சிக்னல்! -
முக்கிய கட்டத்தை எட்டிய பேச்சுவார்த்தை.. பாகிஸ்தானிலிருந்து வந்த குட் நியூஸ்! இந்தியாவுக்கு நிம்மதி! -
மூடு மாறிய டிரம்ப்! 'ரீசெட்' பண்ணிடுவோம் பாத்துக்கோங்க.. ஈரான் விஷயத்தில் வாயை விட்டுட்டாரே! -
மினாப் 168: ரத்தத்தில் மூழ்கிய புத்தகம், ஷூ, ஸ்கூல் பேக்.. அமெரிக்காவை நடுங்க வைக்கும் ஈரானின் செயல்! -
பங்குச்சந்தை முதலீட்டாளர்களே உஷார்.. அடுத்த வாரம் ஒரு பிரேக் வருவது! -
மொத்தமாக சொதப்பிய டிரம்ப்.. இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்விக்கு இந்த 5 விஷயம்தான் காரணம்! -
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை ரத்தகளறி! தங்கம் - பங்குகள் வீழ்ச்சி, எண்ணெய் உயர்வு?














Click it and Unblock the Notifications