ஈரானில் அணு ஆயுதம்? சொந்த நாட்டின் உளவுத்துறையை கடித்து வைத்த டிரம்ப்! செய்தியாளர் சந்திப்பில் ஜர்க்
வாஷிங்டன்: "என்னங்க, உங்க நாட்டு உளவுத்துறையே, ஈரானில் அணு ஆயுதம் இல்லைன்னு சொல்லிடுச்சு, அப்புறம் எதுக்கு இஸ்ரேலுக்கு சப்போர்ட் செய்றீங்க?" என நேற்று பத்திரிகையாளர்கள் டிரம்பிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த டிரம்ப், உளவுத்துறை தப்பு செய்துவிட்டது என்று கூறியுள்ளார்.
குறிப்பாக, உளவுத்துறை தலைவர் துல்சி கப்பார்ட்டின் செயல்பாட்டை, அவர் கடிந்து கொட்டியுள்ளார்.

நேற்று பத்திரிகையாளர்களுக்கு டிரம்ப் பேட்டியளித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், "ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குகிறது என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது? உங்களுடைய உளவுத்துறையிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுகிறார்களே?" என்று கேள்வி எழுப்பினார். இதை சற்றும் எதிர்பார்க்காத டிரம்ப், ஜர்க் ஆனார். ஆனால், உடனே சுதாரித்துக்கொண்டு, "அப்படியா? என் உளவுத்துறை தவறு செய்திருக்கிறது. உங்களுக்கு இதை சொன்னது யார்?" என்று கேள்வி எழுப்பினார்.
பதிலுக்கு பத்திரிகையாளர், "உங்கள் உளவுத்துறை தலைவர் துல்சி கப்பார்ட்தான் இதை சொன்னார்" என்று பதிலளிக்க, கொஞ்சம் கூட காத்திராத டிரம்ப், "அவர் தவறாக கூறியிருக்கிறார்" என்று ரிப்ளை கொடுத்திருக்கிறார். மேலும், "ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் இறுதி கட்டத்தில் உள்ளது. உளவுத்துறையின் முடிவு இதற்கு எதிராக இருந்தாலும், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த சம்பாஷனைகள் தன்னை நோக்கி திரும்புவதை உணர்ந்த துல்சி, "ஈரான் சில வாரங்கள் அல்லது மாதங்களில் அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் இருக்கிறது என்று அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்துள்ளது. அவர்கள் அதை செய்ய முடிவு செய்தால் உடனடியாக ஆயுதத்தை உருவாக்க முடியும். அது நடக்கக்கூடாது என்பதில் அதிபர் டிரம்ப் தெளிவாக இருக்கிறார், நானும் அதை ஒப்புக்கொள்கிறேன்" என்று சேம் சைட் கோல் அடித்திருக்கிறார்.
டிரம்ப்பும், அமெரிக்க உளவுத்துறையும் என்னதான் இப்படி மாறி, மாறி உருட்டினாலும், ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கிறது என்பதற்கு இப்போது வரை வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. மட்டுமல்லாது, அமெரிக்க அதிபர் ஒருவர், நாட்டின் உளவுத்துறையை கடித்து வைத்திருப்பது சர்வதேச அளவில் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
ஈரான் மீது நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று வெளிப்படையாக அமெரிக்கா சொல்லாவிட்டாலும், ஈரானின் அணுசக்தி திட்டத்தை முழுவதுமாக அழிப்பதற்கான இஸ்ரேலின் திட்டத்திற்கு அந்நாடு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. குறிப்பாக, ஃபோர்டோவ் செறிவூட்டும் ஆலையை அழிப்பது அவசியம் என அமெரிக்காவும் கருதுகிறது.
மலைக்குள் சுமார் 300 மீ ஆழத்தில் இருக்கும் இந்த இடத்தைத் தாக்க, அமெரிக்காவிடம் இருக்கும் 30,000-பவுண்டு (13,000 கிலோ) எடையுள்ள குண்டு மற்றும் அதை எடுத்துச் செல்லும் விமானங்களும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
பெரிதாகும் போர்? அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ளே வரும் பிரிட்டன்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்! -
லூப்பில் சிக்கிய ஈரான்! 1 கோடி கரன்சி நோட்டு அச்சடிப்பு.. ஆனா இந்திய ரூபாயில் இவ்வளவுதான் மதிப்பு -
ஈரான் அணுசக்தி மையத்தை குறி வைத்த அமெரிக்கா! ருத்ர தாண்டவம் ஆடிய டிரம்ப்! -
அமீரகத்தில் குண்டு விழுந்தால் அமெரிக்கா அலறுவது ஏன்.. ஈரான் கையில் எடுத்துள்ள பகீர் திட்டம்! -
112 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. தங்கம் மற்றும் பெட்ரோல் விலையில் அடுத்த அதிரடி மாற்றம் என்ன? -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
அமெரிக்காவின் பிரம்மாஸ்திரம் எல்லாம் காலி! இப்படித்தான் வீழ்த்தணும்! உலகிற்கே பாடம் எடுக்கும் ஈரான் -
முடிவுக்கு வரும் ஈரான் போர்? இஸ்ரேல் பிரதமர் சொன்ன "அந்த" ஒரு வார்த்தை! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
வல்லரசின் அஸ்தமனம்! அமெரிக்காவின் 20 ஆண்டு உழைப்பை நொறுக்கிய ஈரான்! ஈராக்கில் இருந்து US வெளியேறியது -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
இந்தியாவுக்கு புது பிரச்சனை.. கத்தாரை விடாமல் தாக்கும் ஈரானால் தலைவலி.. போன் போட்ட மோடி.. பின்னணி











Click it and Unblock the Notifications