துனிசியாவில் தொடங்கி அரபு நாடுகளை அலற இன்னமும் வைக்கும் அரபு வசந்தம்....
ஆஸ்லோ: அமைதிக்கான நோபல் பரிசை துன்சியாவின் தேசிய பேச்சுவார்த்தைக் குழு பெறுவதற்கு அடிப்படையாக இருந்த "அரபு வசந்தம்"தான் அரபு நாடுகளை ஆப்பிரிக்க நாடுகளையும் பதம் பார்த்து கொண்டிருக்கிறது.
துனிசியாவில் 2010ஆம் ஆண்டு ஆட்சியாளருக்கு எதிராக மல்லிகைப் புரட்சி என்ற பெரும் கிளர்ச்சி வெடித்தது. சுமார் 2 ஆண்டுகாலம் இந்த புரட்சி நீடித்து துனிசியாவில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தியது.

அப்போது அமைதிவழியில் ஜனநாயக ஆட்சி மாற்றத்துக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்காகத்தான் தேசிய பேச்சுவார்த்தைக் குழுவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த கிளர்ச்சிதான் மத்திய கிழக்கு அரபு நாடுகளையும் வடக்கு ஆப்பிரிக்கா தேசங்களையும் 'அரபு வசந்தங்களாக' ஆட்டிப் படைத்தது.
எகிப்து, லிபியா, யேமனில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தின. லிபியாவில் 42 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த கடாபி புரட்சியாளர்களால் பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
சிரியாவில் அப்போது தொடங்கிய உள்நாட்டு யுத்தம் 3வது உலக யுத்தத்தைப் போல விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. இந்த அரபு வசந்தத்தின் தாக்குதலுக்கு அல்ஜீரியா, ஈராக், ஜோர்டான், குவைத், மொராக்கோ, சூடானும் தப்பவில்லை.
செளதி, ஓமன், மேற்கு சகாராவிலும் 'லைட்டாக' அரபு வசந்தம் எட்டிப் பார்த்து ஓய்ந்தது. இந்த அரபு வசந்தத்தின் ஆயுதமாக சமூக வலைதளங்கள்தான் பயன்படுத்தப்பட்டன.
உள்நாட்டு இளைஞர்களின் எழுச்சிக் குரலாக வெடித்த இந்த அரபு வசந்தத்தை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொண்டன. தாம் விரும்பிய நாடுகளில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்துவதற்கான கருவியாக இந்த அரபுவசந்தம் அமெரிக்காவுக்கு பேருதவியாக இருந்தது.
கிளர்ச்சி குழுக்களுக்கு ஆயுத உதவியையும் தார்மீக ஆதரவையும் அமெரிக்கா வழங்கியது. ஆனால் சிரியாவில் அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைக்கு இப்போது செக் வைத்திருக்கிறது ரஷ்யா. அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சிக் குழுவை வேட்டையாடி வருகிறது ரஷ்யா. அந்நாட்டுடன் ஈரானும் கை கோர்க்கிறது.
சிரியாவில் அரபு வசந்தமாக தொடங்கிய உள்நாட்டு யுத்தம் இப்போது உலக மகா யுத்தமாக விஸ்வரூபமெடுக்குமா? அல்லது அமெரிக்கா, ரஷ்யா இடையேயான மோதலால் ஏற்கெனவே பெரும்பகுதியை கபளீகரம் செய்திருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் சிரியா வீழுமா? என்ற கேள்வியும் எழுந்து நிற்கிறது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications