துனிசியாவில் தொடங்கி அரபு நாடுகளை அலற இன்னமும் வைக்கும் அரபு வசந்தம்....
ஆஸ்லோ: அமைதிக்கான நோபல் பரிசை துன்சியாவின் தேசிய பேச்சுவார்த்தைக் குழு பெறுவதற்கு அடிப்படையாக இருந்த "அரபு வசந்தம்"தான் அரபு நாடுகளை ஆப்பிரிக்க நாடுகளையும் பதம் பார்த்து கொண்டிருக்கிறது.
துனிசியாவில் 2010ஆம் ஆண்டு ஆட்சியாளருக்கு எதிராக மல்லிகைப் புரட்சி என்ற பெரும் கிளர்ச்சி வெடித்தது. சுமார் 2 ஆண்டுகாலம் இந்த புரட்சி நீடித்து துனிசியாவில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தியது.

அப்போது அமைதிவழியில் ஜனநாயக ஆட்சி மாற்றத்துக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்காகத்தான் தேசிய பேச்சுவார்த்தைக் குழுவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த கிளர்ச்சிதான் மத்திய கிழக்கு அரபு நாடுகளையும் வடக்கு ஆப்பிரிக்கா தேசங்களையும் 'அரபு வசந்தங்களாக' ஆட்டிப் படைத்தது.
எகிப்து, லிபியா, யேமனில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தின. லிபியாவில் 42 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த கடாபி புரட்சியாளர்களால் பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
சிரியாவில் அப்போது தொடங்கிய உள்நாட்டு யுத்தம் 3வது உலக யுத்தத்தைப் போல விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. இந்த அரபு வசந்தத்தின் தாக்குதலுக்கு அல்ஜீரியா, ஈராக், ஜோர்டான், குவைத், மொராக்கோ, சூடானும் தப்பவில்லை.
செளதி, ஓமன், மேற்கு சகாராவிலும் 'லைட்டாக' அரபு வசந்தம் எட்டிப் பார்த்து ஓய்ந்தது. இந்த அரபு வசந்தத்தின் ஆயுதமாக சமூக வலைதளங்கள்தான் பயன்படுத்தப்பட்டன.
உள்நாட்டு இளைஞர்களின் எழுச்சிக் குரலாக வெடித்த இந்த அரபு வசந்தத்தை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொண்டன. தாம் விரும்பிய நாடுகளில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்துவதற்கான கருவியாக இந்த அரபுவசந்தம் அமெரிக்காவுக்கு பேருதவியாக இருந்தது.
கிளர்ச்சி குழுக்களுக்கு ஆயுத உதவியையும் தார்மீக ஆதரவையும் அமெரிக்கா வழங்கியது. ஆனால் சிரியாவில் அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைக்கு இப்போது செக் வைத்திருக்கிறது ரஷ்யா. அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சிக் குழுவை வேட்டையாடி வருகிறது ரஷ்யா. அந்நாட்டுடன் ஈரானும் கை கோர்க்கிறது.
சிரியாவில் அரபு வசந்தமாக தொடங்கிய உள்நாட்டு யுத்தம் இப்போது உலக மகா யுத்தமாக விஸ்வரூபமெடுக்குமா? அல்லது அமெரிக்கா, ரஷ்யா இடையேயான மோதலால் ஏற்கெனவே பெரும்பகுதியை கபளீகரம் செய்திருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் சிரியா வீழுமா? என்ற கேள்வியும் எழுந்து நிற்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications