பிறக்கும்போதே கைகோர்த்த இரட்டை சகோதரிகள் – அன்னையர் தின இன்ப அதிர்ச்சி
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரு தம்பதியினருக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் பிறக்கும் போதே கைகளைக் கோர்த்துக் கொண்டு பிறந்த சம்பவம் அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த தம்பதிகள் பில் போத் மற்றும் சாரா டிஸ்டில்தவெயிட் . சாரா கர்ப்பமாக இருந்தார்.
கடந்த அன்னையர் தினத்தையொட்டி அவர் குழந்தை பெற்று கொள்ள விரும்பினார்.
இரட்டை பெண் குழந்தைகள்:
இதை தொடர்ந்து நேற்று டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். அவருக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்தது.
பிறக்கும் போதே ஒற்றுமை:
அதிசயம் என்னவென்றால் இரண்டு குழந்தைகளும் தங்களது கைகளை கோர்த்தபடி பிறந்து உள்ளது.
அன்னையர் தின பரிசு:
குழந்தைகளுக்கு ஜில்லியன் மற்றும் ஜின்னா என பெயரிட்டு உள்ளனர்.இது குறித்து சாரா கூறும் போது, "இது அன்னையர் தினத்தில் எனக்கு கிடைத்த நல்ல பரிசுப்பொருள் .நான் இதை நம்ப வில்லை .
கைகோர்த்த சகோதரிகள்:
இது அதிசயமானது இருவரும் கைகோர்த்தபடி பிறந்து உள்ளனர். இருவரும் நல்ல நணபர்களாக இருப்பார்கள்" என கூறினார்.
10 ஆயிரத்தில் ஒருவர்:
இதுபோல் குழந்தை பிறப்பிற்கு மோனோம்னியோடிக் என பெயர்.10 ஆயிரம் கருவுற்றலில் ஒன்றில் இவ்வாறு ஏற்படலாம் என டாகடர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications