அதிகாலையிலேயே குலுங்கிய பூமி.. ஆப்கானிஸ்தான் - மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. மக்கள் பீதி
காபூல்: நம் அண்டை நாடுகளாக உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மரில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. வீடுகள் குலுங்கியதால் அச்சமடைந்த பொதுமக்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து பொதுவெளியில் தஞ்சமடைந்துள்ளனர்.
நம் நாட்டின் அண்டை நாடுகளாக ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் உள்ளன. இந்த 2 நாடுகளும் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் அவ்வப்போது இங்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் இருநாடுகளிலும் இன்று அதிகாலையில் திடீரென்று அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.
அதன்படி ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் 1.26 மணி மற்றும் அதிகாலை 2.11 மணிக்கு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வீடுகள் லேசாக குலுங்கி உள்ளது. வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள் கண்விழித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்துள்ளனர். பாதுகாப்பு கருதி அவர்கள் பொதுவெளியில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கங்களை தேசிய நிலஅதிர்வு மையம் பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள முதல் எக்ஸ் பதிவில், ‛‛ஆப்கானிஸ்தானில் அதிகாலை 1.26 மணிக்கு பூமிக்கடியில் 190 கிலோமீட்டர் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.2 என்ற அளவில் பதிவாகி உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வது எக்ஸ் பதிவில்,‛‛ஆப்கானிஸ்தானில் பூமிக்கடியில் 125 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலை 2.11 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 என்ற அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இன்னொரு அண்டை நாடான மியான்மரிலும் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டை எடுத்து கொண்டால் அதிகாலை 3.26 மணிக்கு பூமிக்கடியில் 105 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.7 என்ற அளவில் பதிவாகி உள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்றைய தினமும் மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று பிற்பகல் 3 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 110 கிலோமீட்டரில் நிலை கொண்டிருந்தது. அதற்கு முன்பாக ஜூலை 17 ம் தேதி மதியம் 1.24 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.7 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications