அதிகாலையிலேயே குலுங்கிய பூமி.. ஆப்கானிஸ்தான் - மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. மக்கள் பீதி
காபூல்: நம் அண்டை நாடுகளாக உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மரில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. வீடுகள் குலுங்கியதால் அச்சமடைந்த பொதுமக்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து பொதுவெளியில் தஞ்சமடைந்துள்ளனர்.
நம் நாட்டின் அண்டை நாடுகளாக ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் உள்ளன. இந்த 2 நாடுகளும் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் அவ்வப்போது இங்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் இருநாடுகளிலும் இன்று அதிகாலையில் திடீரென்று அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.
அதன்படி ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் 1.26 மணி மற்றும் அதிகாலை 2.11 மணிக்கு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வீடுகள் லேசாக குலுங்கி உள்ளது. வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள் கண்விழித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்துள்ளனர். பாதுகாப்பு கருதி அவர்கள் பொதுவெளியில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கங்களை தேசிய நிலஅதிர்வு மையம் பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள முதல் எக்ஸ் பதிவில், ‛‛ஆப்கானிஸ்தானில் அதிகாலை 1.26 மணிக்கு பூமிக்கடியில் 190 கிலோமீட்டர் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.2 என்ற அளவில் பதிவாகி உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வது எக்ஸ் பதிவில்,‛‛ஆப்கானிஸ்தானில் பூமிக்கடியில் 125 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலை 2.11 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 என்ற அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இன்னொரு அண்டை நாடான மியான்மரிலும் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டை எடுத்து கொண்டால் அதிகாலை 3.26 மணிக்கு பூமிக்கடியில் 105 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.7 என்ற அளவில் பதிவாகி உள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்றைய தினமும் மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று பிற்பகல் 3 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 110 கிலோமீட்டரில் நிலை கொண்டிருந்தது. அதற்கு முன்பாக ஜூலை 17 ம் தேதி மதியம் 1.24 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.7 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications