அதிகாலையிலேயே குலுங்கிய பூமி.. ஆப்கானிஸ்தான் - மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. மக்கள் பீதி
காபூல்: நம் அண்டை நாடுகளாக உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மரில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. வீடுகள் குலுங்கியதால் அச்சமடைந்த பொதுமக்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து பொதுவெளியில் தஞ்சமடைந்துள்ளனர்.
நம் நாட்டின் அண்டை நாடுகளாக ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் உள்ளன. இந்த 2 நாடுகளும் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் அவ்வப்போது இங்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் இருநாடுகளிலும் இன்று அதிகாலையில் திடீரென்று அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.
அதன்படி ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் 1.26 மணி மற்றும் அதிகாலை 2.11 மணிக்கு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வீடுகள் லேசாக குலுங்கி உள்ளது. வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள் கண்விழித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்துள்ளனர். பாதுகாப்பு கருதி அவர்கள் பொதுவெளியில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கங்களை தேசிய நிலஅதிர்வு மையம் பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள முதல் எக்ஸ் பதிவில், ‛‛ஆப்கானிஸ்தானில் அதிகாலை 1.26 மணிக்கு பூமிக்கடியில் 190 கிலோமீட்டர் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.2 என்ற அளவில் பதிவாகி உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வது எக்ஸ் பதிவில்,‛‛ஆப்கானிஸ்தானில் பூமிக்கடியில் 125 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலை 2.11 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 என்ற அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இன்னொரு அண்டை நாடான மியான்மரிலும் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டை எடுத்து கொண்டால் அதிகாலை 3.26 மணிக்கு பூமிக்கடியில் 105 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.7 என்ற அளவில் பதிவாகி உள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்றைய தினமும் மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று பிற்பகல் 3 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 110 கிலோமீட்டரில் நிலை கொண்டிருந்தது. அதற்கு முன்பாக ஜூலை 17 ம் தேதி மதியம் 1.24 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.7 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications