லிபியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் சிக்கிய 2 இந்திய பேராசிரியர்கள்.. ஓராண்டுக்கு பிறகு மீட்பு
டெல்லி: லிபியா நாட்டில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இரு இந்திய பேராசிரியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
லிபியாவில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 4 இந்தியப் பேராசிரியர்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்களில் 2 பேர் அடுத்த சில நாட்களில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் 2 பேர் பிணை கைதிகளாக இருந்த நிலையில் தற்போது ஆபத்தின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பேராசிரியர்கள்
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பலராம், கோபி கிருஷ்ணா ஆகிய இருவரும், கடந்த 8 ஆண்டுகளாக லிபியா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்களாக பணியாற்றி வந்தவர்கள்.

கர்நாடக உதவி பேராசிரியர்கள்
கர்நாடகாவை சேர்ந்த லட்சுமி காந்த், விஜயகுமார் ஆகியோர் அதே பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

கடத்தல்
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலையில் இவர்கள் நான்கு பேரும் இந்தியா செல்ல விமானம் நிலையத்துக்கு புறப்பட்டனர். அப்போது, லிபிய தலைநகர் திரிபோலியில் இருந்து 4 பேரும் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். இதையடுத்து இந்திய உள்துறை அமைச்சகம், லிபிய தூதரக அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரியது.

இருவர் மட்டும் விடுவிப்பு
இந்நிலையில், தீவிரவாதிகளுடன் லிபியா அரசு நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அடுத்த சில நாட்களிலேயே விஜயகுமார், லட்சுமிகாந்த் ஆகிய இருவரை தீவிரவாதிகள் விடுவித்தனர்.

இப்போது விடுதலை
பலராம், கோபி கிருஷ்ணா ஆகிய இருவரும் விரைவில் விடுவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓராண்டு கடந்த நிலையில், கடும் முயற்சிக்கு பிறகு இருவரும் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications