3 ஆண்டுகால உள்நாட்டுப் போர்.. சிரியாவில் 9 ஆயிரம் குழந்தைகள் உட்பட 2 லட்சம் பேர் பலி!
டமாஸ்கஸ்: 3 ஆண்டுகாலமாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் சுமார் 2 லட்சம் பேர் பலியாகி இருக்கின்றனர். இவர்களில் 9 ஆயிரம் குழந்தைகளும் அடங்குவர்.
சிரியாவில் அதிபர் பஷர்அல்- ஆசாத்துக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் மக்கள் புரட்சி வெடித்தது. மக்களுக்கு ஆதரவாக புரட்சி படை உருவானது. போராட்டத்தை நசுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிபர் ஆசாத்தின் ராணுவத்துடன் புரட்சி படை போரிட்டு வருகிறது.

இதனால் அங்கு கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆனாலும் பதவி விலக அதிபர் ஆசாத் மறுத்து விட்டார். அதனால் அங்கு போர் தொடர்கிறது.
புரட்சி படையின் பிடியில் பல நகரங்கள் உள்ளன. அதே நேரத்தில் அங்கு எழுச்சி பெற்றுள்ள ‘ஐ.எஸ்.ஐ.எஸ்' தீவிரவாதிகளும் ஒரு பகுதியை கைப்பற்றி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் அங்கு இதுவரையிலான யுத்தத்தில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 369 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 9 ஆயிரம் பேர் குழந்தைகள். இந்த தகவலை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவிபிள்ளை தெரிவித்துள்ளார்.
அதாவது சிரியாவில் சராசரியாக மாதந்தோறும் 6 ஆயிரம் பேர் பலியாகி இருக்கின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications