சைபர் தாக்குதலை முறியடிக்கும் புதிய தொழில்நுட்பம்: இந்திய விஞ்ஞானிக்கு விருது

டெல்லி ஐ.ஐ.டி.யின் முன்னாள் மாணவரான சஞ்சம் கார்க், ஆன்லைன் சைபர் தாக்குதல்களில் இருந்து தகவல்களை பாதுகாக்கும் வகையில் 'கேண்டிடேட் மல்டிலீனியர் மேப்ஸ்' என்ற புதிய கம்ப்யூட்டர் புரோகிராமை வடிவமைத்துள்ளார்.
இதில் கடினமான கணித புதிர்களை பதிவு செய்து அதை என்கிரிப்டு செய்தால் மட்டுமே நாம் அந்த தகவல்களை பார்க்க முடியும் என்ற வகையில் புரோகிராமை எழுதியுள்ளார்.
திருடவே முடியாத புதிர்கள்
இந்த புதிர்களுக்கான விடைகளையே பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்தியுள்ளார். வெவ்வேறு வகையான புதிர்கள் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளதால் அவ்வளவு எளிதாக எந்த கம்யூட்டர் சாப்ட்வேராலும் தகவல்களை திருட முடியாது.
கண்டுபிடிப்புக்கு விருது
இந்த சாதனைக்காக இந்திய விஞ்ஞானி சஞ்சம் கார்கிற்கு 2013 ஆம் ஆண்டிற்கான 'டாக்டோரல் டிசர்டேஷன்' விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது நவீன கம்யூட்டர் தொழில்நுட்பத்தில் விஞ்ஞானிகள் மற்றும் கணிணி வல்லுனர்களின் கண்டுபிடிப்புகளை அங்கீகரித்து ஏ.சி.எம். என்ற அமைப்பால் வழங்கப்படுவதாகும்.
கூகுள் ஸ்பான்சர்
வரும் ஜூன் 21 ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் இவருக்கு விருது வழங்க விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த விழாவுக்கு பிரபல தேடுபொறி இணையதளமான 'கூகுள்' ஸ்பான்சர் செய்துள்ளது. இதில் அவருக்கு 20 ஆயிரம் அமெரிக்க டாலர்களும் பரிசாக வழங்கப்படுகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ்சில் படிப்பு
கார்க் தன்னுடைய ஆராய்ச்சி படிப்பை லாஸ் ஏங்கல்ஸ் நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஐ.பி.எம். ஆராய்ச்சி மையத்தில் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.












Click it and Unblock the Notifications