அப்பதான் சிரித்து பேசிகொண்டே வந்தார்.. திடீரென உடம்பை துளைத்த குண்டுகள்.. அமைச்சரின் மகள் பரிதாப பலி
அமைச்சரின் மகள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்
கம்பாலா: அமைச்சருக்கு வைத்த குறியில் மகள் சிக்கி விட்டார்.. நடுவழியில் காரை மறித்து துப்பாக்கியால் சுட்டதில், உகாண்டா நாட்டு அமைச்சரின் மகள் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று உகாண்டா.. இங்கு அதிபர் யோவேரி முசவேனி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது... இங்கு தொழில் மற்றும் போக்குவரத்து துறை இருந்து வருபவர் கட்டும்பா வாமலா... இவர் ஒரு முன்னாள் ராணுவ தளபதி.

இவருக்கு 64 வயதாகிறது.. அரசியலில் தீவிரமாக ஈடுபடும் நோக்கில், அதை ராஜினாமா செய்தவர்.. கடந்த 2019-ம் ஆண்டு அமைச்சர் பொறுப்பையும் ஏற்றவர்.. இந்நிலையில், அமைச்சர் கம்பாலாவில் உள்ள புறநகர் பகுதியில் தன்னுடைய மகளுடன் காரில் சென்று கொண்டிருந்தார். மகள் பெயர் நாந்தோங்கோ.
அப்பாவுடன் சிரித்து மகிழ்ந்து பேசி கொண்டே வந்தார்.. அப்போது திடீரென இவர்கள் கார் மீது சிலர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.. தொடர்ந்து சுட்டதில் அந்த காரை துளைத்து கொண்டு, துப்பாக்கி குண்டுகள் அப்பா, மகளுடன் சேர்த்து டிரைவர் மீதும் பாய்ந்தது.. இதில் மகளும், டிரைவரும் ரத்த வெள்ளத்தில் காருக்குள்ளேயே இறந்துவிட்டனர்..
ஆனால், அமைச்சர் கட்டும்பா வாமலா உடம்பெல்லாம் காயங்களுடன் உயிர் தப்பினார்.. இதையடுத்து, அங்கிருந்தோர் விரைந்து வந்து அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. ஐசியூவில் தீவிரமான சிகிச்சையும் நடந்து வருகிறது..
அமைச்சருக்கு குறி வைத்து இந்த கொலைகள் நடந்துள்ளன.. அந்த மர்ம நபர்கள் யார் என்று தெரியவில்லை.. அமைச்சரை கொலை செய்ய நடந்த சதியில் அவரது இளம்வயது மகள் கொல்லப்பட்டது அந்நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications