பொருளாதாரம் பாதிக்கும்... தீபாவளி, ரம்ஜானை அரசு விடுமுறையாக அறிவிக்க இங்கிலாந்து மறுப்பு
லண்டன்: தீபாவளி மற்றும் ரம்ஜானை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க இயலாது என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
இந்துக்களும், இஸ்லாமியர்களும் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்று இங்கிலாந்து. ஆனபோதும், அங்கு தீபாவளி மற்றும் ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை வழங்கப் படுவதில்லை.
எனவே, இந்துக்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளிக்கும், இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான ரம்ஜானுக்கும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என அந்நாட்டு அரசுக்கு சுமார் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 843 இணையவழி வேண்டுகோள்கள் மனுக்கள் அனுப்பப் பட்டன.
அதனைத் தொடர்ந்து இது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கும் படி கமிட்டி ஒன்றிற்கு உத்தரவிட்டது இங்கிலாந்து அரசு. இந்து மற்றும் இஸ்லாமிய மக்களின் கோரிக்கையை ஆய்வு செய்த அந்த கமிட்டி மேற்கண்ட பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
'தீபாவளி, ரம்ஜான் போன்றவை இங்கு பரவலாக கொண்டாடப்பட்டு வந்தாலும், இந்த பண்டிகைகளை வங்கி மற்றும் அரசு விடுமுறை தினமாக அறிவிப்பதன் மூலம் நாட்டுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை ஏற்க முடியாது' என விடுமுறை மறுப்பிற்கான காரணமாக கமிட்டி விளக்கமளித்துள்ளது.












Click it and Unblock the Notifications